(இ - ள்.) கறவைகன்று வாய்மிகுத்த - கறவைப் பசுக்கள் தம் கன்றுகளை வாயின் ஊட்டிய பின்னர் மிக்குச் சொரிந்த, அமிழ்தினோடு - தீம்பாலாகிய அமிழ்தத்தோடே, கண்அகன் புறவின் - இடம் அகன்ற முல்லை நிலத்தின்மேல், மாமரைமுலைப் பொழிந்தபால் - பெரிய மரைகள் தம் முலைகள் சுரந்து விம்மிப் பொழிந்த பாலும், நெகிழ்ந்து எழ - பெருகி ஓட, பறவையுண்டு - பறவைகள் அப்பாலைப் பருகி, பாடவும் - பாடாநிற்பவும், பால் பரந்த பூமியின் - அப்பால் பரவிய அந்நிலத்தின்மேல், நறவு விண்ட நாகுமுல்லை - தேனைப்பொழிந்த, இளமைமிக்க முல்லைகள், வாய்திறந்து நக்கவே - தம் மலர்வாய் திறந்து முறு வலித்தன, (எ - று.) ஆன்களின் கன்றுண்டெஞ்சிய பாலோடே, மரைகளின் பாலும் கலந்து பெருகி ஓடாநிற்ப, அப்பாலைப் பறவைகள் பருகி மகிழ்ந்து பாட, அப்பாலோடே முல்லைக் கொடிகள் தம் தேனையும் கலந்து, (பாலோடு தேனும் கலந்துண்டு பாடுக பறவையீர்! என்று மகிழ்ச்சியாலே) சிரித்தன என்க. |
(இ - ள்.) வேரல் வேலி மால்வரை - குறும்புதல்களை வேலியாக வுடைய பெரிய மலைகளின், கவானின் - பக்கங்களினும், வேய்விலங்கலில் - மூங்கில்கள் செறிந்த மலைகளினும், சாரல் மேகம் - சார்தலுடைய முகில்கள், நீர் முதிர்ந்து - நீரான்மிகுந்து, தண் துளி - குளிர்ந்த மழைத்துளிகளை, துளித்தலால் - பெய்தலால், மூரல்வாய் அசும்பு அறாத முல்லை - பற்கள் போன்ற அரும்புகளில் தேன்றுளித்தல் அறாத முல்லைகள், விள்ளும் எல்லைபோய் - மலர்கின்ற முல்லைநிலத்தைக் கடந்து சென்று, நீரவாளை - |