பக்கம் : 532 | | நீரில் வாழ்வனவாகிய வாளைமீன்கள், பூவின்வைகும் நீள்பரப்பு நண்ணினார் - மலர்ப்படுக்கையிலே வதிகின்ற நீண்ட மருதநிலப் பகுதியை அடைந்தார்கள், (எ - று.) முல்லை நிலத்தைக்கடந்து அதன் அயலதாகிய மருத நிலத்தை எய்தினர் என்க. முகில்கள் துளித்தலாலே முல்லை மலரும் முல்லைநிலங்கடந்து, மலர்ப்பள்ளியின்கண் வாளை மீன்கள் வைகும் வளமுடைய மருத நிலத்தை எய்தினர் என்க. இதன்கண் குறிஞ்சி, முல்லை, மருதம் மூன்று மயங்குதல் காண்க. | ( 227 ) | விசயன் மருதநிலத்தின் மாண்புரைத்தல் | 800. | புதுநாண் மலர்விண் டுபொழிந் திழியு மதுநா றுபுனன் மருதத் 1தினைமற் றிதுகா ணெனவின் னனசொல் லினனே 2விதுமாண் மிகுசோ திவிளங் கொளியான். | இது முதல், 14 செய்யுள்கள் ஒரு தொடர். (இ - ள்.) புது நாண் மலர் - புதுவதாய் அன்றலர்ந்த மலர்கள், விண்டு பொழிந்து இழியும் - வாய்நெகிழ்ந்து பொழிதலாலே ஒழுகுகின்ற, மதுநாறு புனல் - தேன்கமழும் நீர்மிக்க, மருதத்தினை - அம்மருத நிலத்தின்கண் உள்ள வளங்களை, இது காண் என - இதனைக் காண்பாயாகவென்று திவிட்டனைக்காட்டி, இன்னன சொல்லினனே - இவை இவை கூறினன், (அவன் யாரெனில்) விதுமாண்மிகு சோதி - திங்கள் மண்டிலத்தின் மாட்சிமை மிக்க ஒளியை ஒத்து, விளங்கு ஒளியான் - திகழ்தலையுடைய வண்ணத் தானாய விசயன், (எ - று.) நாள் மலர் பொழியும் தேன் மணம் கமழ்கின்ற நீர் மிக்க மருதம் எய்தியவுடன் விசயன் அதன் வளத்தைத் திவிட்டனுக்குக் காட்டிக் கூறுவான் ஆயினன் என்க. இனி வருவன மருதநில வளம் என்க. | ( 228 ) | | 801. | அயலோ தமிரட் டவலம் பொலிநீர் வயலோ தமயங் கமயங் கவதிர்ந் தியலோ தையிளஞ் சிறை 3யன் னமெழக் கயலோ டியொளிப் பனகாண் கழலோய். | (இ - ள்.) அயல் ஓதம் இரட்ட - பக்கத்தே கடல் ஒலிப்ப, அலம்பு ஒலிநீர் வயல் ஓதம் மயங்க - அலசுதலாலே எழும் ஒலியையுடைய நிர்நிறைந்த வயல் ஒலியும் அவ்வொலியோடு பொருந்த, மயங்க அதிர்ந்து |
| (பாடம்) 1. திணைமற். 2. விதிமாண். 3. யன்ன மெழாக். | | |
|
|