பக்கம் : 535 | | நகும் - மலர்ந்து சுடர்பெருக நகைக்கும், நவைவென்றன - குற்றமற்றனவாகிய, தாமரை நாண்மலரே - புதிய மலர் நிறைந்த தாமரைக் காடுகளாம், (எ - று.) இவை நீலோற்பலக் காடுகள்; அவை செங்கழுநீர்க் காடுகள்; உவை நகுகின்ற தாமரைக் காடுகள் என்றான் என்க. | ( 233 ) | | 806. | கழையா டுகரும் பினறைக் கடிகைப் பொழிசா றடுவெம் புகைபொங் கியயற் 1றழையோ டுயர்சோ லைகடாம் விரவி மழையா டுமலைத் தடமொத் துளவே. | (இ - ள்.) கழை ஆடு கரும்பின் - கழிகளாக ஆலையில் ஆட்டப்படுகின்ற கரும்பின், நறைக் கடிகைபொழிசாறு - சாற்றுக்கலத்திலே பொழிகின்ற சாற்றை, அடுவெம்புகை பொங்கி - காய்ச்சுதலால் எழுகின்ற வெவ்விய புகைமிகுந்து, அயல் தழையோடு உயர் சோலைகள்தாம் விரவி - பக்கத்தே தழைகளோடு உயர்ந்துள்ள பொழின்மிசைச் செறிந்து, மழையாடும் மலைத்தடம் ஒத்துளது - முகில் தவழும் மலைநிலத்தை ஒத்துத் தோன்றுகின்றது, ஆல் : அசை, (எ - று.) கடிகை - கலம். கருப்பஞ்சாற்றைக் காய்ச்சும் புகை, இருண்ட பொழிலிடத்தே திரண்டு, மலையிடத்தே தவழும் முகில்போலத் தோன்றும், என்றான் என்க. இதுமுதல் ஐந்து செய்யுள் ஒரு தொடர் மருதநிலத்தை ஒரு மகளாக உருவகித்தல் | ( 234 ) | | 807. | கருநீ லமணிந் தகதுப் பினயற் கருநீ லமணிந் தனகண் ணிணைகள் கருநீ லமணிக் கதிர்கட் டியெனக் கருநீ லமணிந் தகருங் குழலே. | (இ - ள்.) கருநீலம் அணிந்த கதுப்பின் - நீலோற்பல மலராகிய ஒப்பனை செய்யப்பட்ட கூந்தலையும், அயலே - அக்கூந்தலின் பக்கத்தே, கருநீலம் அணிந்த கண் இணைகள் - நீலோற்பல மலராகிய அழகுறுத் தப்பட்ட கண்களையும், கருநீல மணிக்கதிர் கட்டியென - கரிய மரகத மணியின் கதிர்களைக் கற்றையாய்க் கட்டினாற் போலும், கருநீலம் அணிந்த - கரிய நீலோற்பல மலராகிய அழகுறுத்தப்பட்ட, கருங்குழல் - கரிய கூந்தலை யும், உடையவளும், (எ - று.) |
| (பாடம்.) 1. தழையாடுயர். | | |
|
|