பக்கம் : 537 | | கின்ற, பன்மலர் - பலவாகிய மலர்களால், தொகை மாலையினள் - தொகுக்கப்பட்ட மாலையை உடையவளும், (எ - று.) ஆம்பல் மலராகிய தழையையும் அடி ஒளியையும் உடையையும் பன்மலர் மாலையையும் உடையவளும் என்க. | ( 237 ) | | 810. | வளர்தா மரையல் லிமலர்த் தியகை வளர்தா மரையல் லிமயக் குமொளி வளர்தா மரையல் 1லிமகிழ்ந் தனள்போல் வளர்தா மரையல் லிவனத் 2திடையாள். | (இ - ள்.) வளர் அல்லி தாமரை - வளர்கின்ற அகவிதழையுடைய தாமரையாகிய, மலர்த்திய கை - விரித்த கைகளையும், வளர் அல்லி தாமரை - வளர்கின்ற அகவிதழையுடைய தாமரையின் நிறமாகிய, மயக்கும் ஒளி - காண்போரை மயக்கும் திருமேனி ஒளியையும் உடையவளாய், வளர்தாமரை அல்லி மகிழ்ந்தனள்போல் - வளராநின்ற தாமரையின் அகவிதழ்க்கண்ணே வதிவதை உவந்தவளாகிய திருமகளைப்போன்று, வளர் தாமரை அல்லி வனத்து இடையாள் - வளர்கின்ற தாமரையும் ஆம்பலுமாகிய காட்டினிடையே வதிபவளும், (எ - று.) தாமரையாகிய கையையும் திருமேனி ஒளியையும் உடையாளாய் மலர்க்காட்டிடை வதிபவளும் என்க. | ( 238 ) | | 811. | நளிர்வார் கழலாய் புகழ்நா டிநயந் தொளிர்வார் குழலா ளொருமா 3தவளு ளுளர்வார் கனியும் மதுவுந் தெகிழக் கிளர் 4பார் வையுறக் கிளர்கின் றதுகேள். | (இ - ள்.) நளிர்வார் கழலாய் - செறிந்த நெடிய வீரக்கழலையுடைய நம்பியே, புகழ்நாடி நயந்து - புகழையே நாடுதலை விரும்பி, ஒளிர்வாள் ஒருமாது - இங்ஙனமாகத் திகழ்கின்றாள் ஒப்பற்ற இம்மருத நிலமடந்தை, அவளுள் - அந்நிலமடந்தையின் பால், உளர்வார் கனியும் மதுவும் தெகிழ - சிந்துகின்ற நீண்ட கனிகளும் தேனும் நெகிழ்வனவாக, கிளர்பார்வையுற - கூறாநின்ற நமது கட்பார்வையிலே பொருந்த, கிளர்கின்றது - ஒளிபரப்பு வதனை, கேள் - இன்னது எனயான் கூறக் கேட்பாயாக. அடுத்த செய்யுளில், “அதுகாண் நமது ஒளிமாநகரே“ என்பதனோடு சென்று முடியும். நீலோற்பலமாகிய கூந்தலையும் கண்களையும், செங்கிடையாகிய நுதலையும் வாயையும், வளையலையும், கொண்டையையும் ஆம்பலாகிய, |
| (பாடம்) 1. மகிழ்ந்தனபோல். 2. திடையோள். 3. தவருள். 4. பாவையுற. | | |
|
|