பக்கம் : 538 | | தழையையும் அடி ஒளியையும் ஆடையையும் பன்மலர் மாலையையும், தாமரையாகிய கையையும், திருமேனி ஒளியையும் உடையளாய், திருமகள் போன்று தாமரை அல்லியிடை வதியும், மருதநில மடந்தையின் அகத்தே தோன்றும் ஒளிவட்டம் (நமது மாநகர் என்று முடித்துக்கொள்க. அடுத்த செய்யுள்) | ( 239 ) | | 812. | மதிகா ணநிமர்ந் தமதிற் சிகர நுதிமா ளிகைமேல நுடங் குகொடி கதிரோ னொளிமாழ் கவெழுந் துகலந் ததுகா ணமதா ரொளிமா நகரே. | (இ - ள்.) மதிகாண நிமிர்ந்த மதில் - திங்கள் மண்டிலத்தைக்காண எழுந்தாற் போன்று உயர்ந்த மதில்களையுடையதாய், மாளிகைச்சிகரம் நுதிமேல நுடங்குகொடி - மாளிகைகளின் உச்சிமேலவாய்க் கட்டப்பட்டு ஆடுதலையுடைய கொடி, கதிரோன் ஒளிமாழ்க - ஞாயிற்றின் ஒளி மழுங்குபடி, எழுந்து கலந்தது காண் - உயர்ந்தெழுந்து அதன் ஒளியோடு கலந்ததனைக் காண்க, நமது ஆர்ஒளி மாநகர் - அங்ஙனம் தோன்றுவது நம்முடைய பேரொளியையுடைய பெரிய போதனமா நகரமாகும். மதிகாண நிமிர்ந்த சிகரத்தோடே, கொடியோடே மாழ்க எழுந்து கலந்தது நமது நகர் காண் என்க. | ( 240 ) | | 813. | அறவே திய 1ரா குதியம் புகையார் உறவே திகைவிம் மியவொண் புறவ நிறவே திகைமீ துநிமிர்ந் தபொழிற் புறவே திகையே றுவகாண் புகழோய். | (இ - ள்.) புகழோய் - புகழுடைய திவிட்டனே!, அறவேதியர் - அறந்தவறாத அந்தணர் இயற்றிய, ஆகுதி அம்புகை - வேள்வியினின் றெழுந்த அழகிய புகை, ஆர்வுற - நிரம்புதலானே, வேதிகை - ஆண்டுள்ள வேதிகைகளில் உறைந்த, விம்மிய - மூச்சு முட்டிய, ஒண் புறவம் - ஒளியுடைய புறாக்கள், நிறவேதிகை மீது - வண்ணந் தீட்டப்பட்ட அவ்வேள்வி மேடைக்குமேல், நிமிர்ந்த பொழிற் புறவேதிகை - ஓங்கிவளர்ந்துள்ள பூம் பொழிலின் புறத்தேயுள்ள வேதிகைகளிலே, ஏறுவகாண் - குடி ஏறுதலைக் காண்பாயாக, (எ - று.) வேதியருடைய ஆகுதிப் புகையாலே விம்மிய புறவுகள் பொழிலின் புறத்தேயுள்ள வேதிகைகளிலே ஏறுதலைக் காண் என்றான் என்க. புறவுகள் - வேதிகையில் வாழுமியல்புடையன! வேதிகை - மேடை. | ( 241 ) |
| (பாடம்) 1. ராவுதியம். | | |
|
|