பக்கம் : 539 | | விசய திவிட்டர் போதனமாநகர் புகுதல் | 814. | இன்னன விளையவற் கியம்பு மெல்லையுட் பொன்னக ரடைந்தனர் பொழுதுஞ் சென்றது நன்னக ரிரைத்தது நரன்ற வின்னிய மன்னவ குமரரும் வறுமை நீங்கினார். | (இ - ள்.) இன்னன இளையவற்கு இயம்பும் எல்லையுள் - இவை இவை திவிட்டனுக்கு விசயன் எடுத்தியம்பிவரும்பொழுது, பொன்னகர் அடைந்தனர் - அழகிய போதன நகரத்தை இருவரும் அடைந்தனர், பொழுதும் சென்றது - பகற்பொழுதும் முடிவுற்றது, நன்னகர் இரைத்தது - இவர்கள் வருகையை அறிந்த சிறந்த நகரமாந்தர் மகிழ்ச்சியாற் கூடி ஆரவாரித்தனர், இன்இயம் நரன்ற - இனிய இசைக் கருவிகள் முழங்கின, மன்னவ குமரரும் வறுமை நீங்கினர், அரசகுமாரர்களாகிய விசய திவிட்டரும் நல்குரவு ஒழியப் பெற்றனர், (எ - று.) வறுமையாவது - நகரின் நிங்கியதால் அதனை மீண்டும் அடைதற்கெழுந்த உள்ள நசை. இவ்வாறு விசயன் கூறிவருமளவில் இருவரும் நகரத்தை எய்தினர்; அப்பொழுது ஞாயிறு மறைந்தது; நகரம் ஆரவாரித்தது, இயம் முழங்கின; இவற்றைக் கேட்டு நம்பிமார் வறுமை நீங்கினார் என்க. | ( 242 ) | | 815. | இளங்களிக் குஞ்சர மிரட்டித் தாயிரம் துளங்கொளிக் 1கலினமாத் தூளி யெல்லைய வளங்கெழு குமரரை வலங்கொண் டெய்தின 2அளந்தறிந் திலமகன் படையி னெல்லையே. | (இ - ள்.) வளங்கெழு குமரரை வலங்கொண்டு எய்தின - எழில் ஆற்றல் முதலிய வளமனைத்தும் நிறைந்துள்ள அவ்வரச மக்களை எதிர்கொண்டு நகர் வலமாக அழைத்துச்சென்றவை, இளங்களிக் குஞ்சரம் - இளமையுடைய செருக்குற்ற யானைகள், இரட்டித்தாயிரம் - இரண்டாயிர மாம், துளங்கு ஒளிக்கலினமா - திகழும் ஒளியையுடைய கடிவாளமிட்ட குதிரைகள், தூளி எல்லைய - துகள்கள் எத்தனை அத்தனை, அதன்படையின் எல்லை - விரிந்த அக் குதிரை தேர் ஆள் ஆகிய மூவகைப் படையின் அளவினை, அளந்து அறிந்திலம் - அளவைகளால் யாம் அளந்து கண்டோமில்லை, (அளவிறந்தன என்றபடி.) (எ - று.) |
| (பாடம்) 1 கவனமா. 2. அளவறிந்து வளந்தறி நிலமகன். 2 ஆவது அடிக்கு “குதிரையின் ஆர்ப்பு“ என்றொரு குறிப்புக் காணப்படுகிறது. | | |
|
|