(இ - ள்.) வெஞ்சுடர் - ஞாயிறு, இருளுக எழுந்தது ஒத்து - இருள் கெடும்படி உதித்தெழுந்ததைப் போன்று, இருந்தகோன் அடி - இருந்த பயாபதி மன்னனுடை திருவடிகளிலே, அருளுவது என்கொல் என்று அஞ்சி - அரசன் எம்மாட்டுப் பணித்தருள நினைவது என்னையோ? என ஐயுற்று அஞ்சினவர்களாய், சுருள்உறு குஞ்சிகள் துதையத் தாழ்ந்தனர் - சுரிந்த தலைமயிர்க் கற்றைகள் தோயவீழ்ந்து வணங்கினர், மன்னன் மருளுறு மனத்தினன் ஆயினான் - பயாபதி மன்னனும் அம்மக்கள்பால் எழுந்த வேணவாவால் மருட்கையுடையவன் ஆனான், (எ - று.) தந்தையின் அழைப்பைப் பெற்ற, விசயதிவிட்டர்கள், நம்பாற்றந்தையார் அருள எண்ணியது என்கொலோ? என்றஞ்சியவராய்ச் சென்று. பயாபதியின் அடியில் வீழ்ந்து வணங்கினர்; மக்களைக்கண்ட மன்னன் பெரிதும் மகிழ்ந்தான் என்க. விசயதிவிட்டர் அஞ்சுதற்கு ஏது, பயாபதி ஈந்த திறைப்பொருளைத்தாம் மறுத்து அச்சுவகண்டன்றூதரை வறிதே உய்த்தமை என்க; அச்செயல்பற்றித் தந்தையார் நம்மை என் நினைப்பரோ என்று அஞ்சினர் என்றவாறு. |
(இ - ள்.) திருவரை அனையதோட் சிறுவர் தம்மை - அழகிய மலைகளை ஒத்த தோள்களையுடையராகிய தன் மக்களை, அக் கருவரை அனைய வெங்களிநல் யானையான் - கரிய மலைபோன்ற வெவ்விய களிப்பையுடைய யானைகளையுடைய அப்பயாபதி வேந்தன் இருவரும் வருகென - நீவிர் இருவீரும் ஒருங்கே வருவீராக என அழைத்து, இரண்டு தோளினும் - தன் இருகைகளாலும், ஒருவரை அகலத்தின் ஒடுங்கப் |