பக்கம் : 550 | | துரகத்தேரோன் - குதிரை பூட்டிய தேருடையோனும், தேமரு திலதம் கண்ணி திவாகரதேவன் என்பான் - தேன் துளும்பும் சிறந்த முடிமாலையணந்தவனும் ஆகிய திவாகரதேவனும், (எ - று.) கந்தமாதனத்துக் காவலனும், தேரானும் ஆகிய திவாகரதேவனும், என்க. | ( 6 ) | 4. வச்சிரதாடன் | 833. | சுந்தரப் பொடியும் பூவுஞ் சுரும்பொடு துதைந்து வீசிச் சந்திரன் றவழு மாடச் சக்கிர வாள மன்னன் மந்தரம லைக்கும் யானை வச்சிர தாட னென்பான் அந்தரத் 1தமரர் னணிந்துபோந் தனைய நீரான். | (இ - ள்.) சுந்தரப்பொடியும் - அழகிய மணப்பொடியும், சுரும்பொடு பூவும் - அளிகளுடனே மலர்மாலைகளும், வீசி - ஊடிய மகளிர்கள் வீசுதலாலே, துதைந்து - செறியப்பட்டு, சந்திரன் தவழும் மாடம் - திங்கள் தவழ்கின்ற மேனிலைமாடங்களையுடைய, சக்கிரவாள மன்னன் - சக்கிரவாளகிரிக்கு அரசனும், அந்தரத்து அமரர்கோமான் - வான்உலகை ஆளும் இந்திரன், அணிந்து போந்தனைய நீரான் - அழகு செய்துகொண்டு வந்தாற்போன்ற அழகுடைய பெற்றியானும், மந்தரம் மலைக்கும் யானை - மந்தர மலையொடு போர்செய்யும் பரிய யானையையுடையவனுமாகிய, வச்சிரதாடன் என்பான்- வச்சிர தாடன் என்னும் பெயருடையானும், (எ - று.) சக்கிரவாளத்து மன்னனும், யானையை உடையானும், இந்திரனை ஒத்தவனும் ஆகிய வச்சிரதாடனும், என்க. | ( 7 ) | 5. இரமிய தரன் | 834. | காரணங் குருவ மேகங் கருவுகொண் டதிர்ந்து வெய்யோன் தேரணங் குறுக்கு மாடத் தேவர 2வணத்துச் செல்வன் ஏரணங் குறுக்கும் பைந்தா ரிரமிய தரனென் றெங்கும் சீரணங் குறுக்குஞ் செய்கைச் செஞ்சுடர்த் திலகப் பூணான். | (இ - ள்.) கார் அணங்கு உருவமேகம் - கரிய அழகுடைய உருவம்பெற்ற முகில், கருவுகொண்டு - கருக்கொண்டு முதிர்ந்து, அதிர்ந்து - தம்மேற்கிடந்து முழங்காநிற்ப, வெய்யோன்தேர் அணங்குறுக்கும் மாடம் - கதிரவனுடைய தேர்ச்செலவைத் தடைசெய்யும் மாடங்களையுடைய, தேவரவணத்துச் செல்வன் - தேவரவணம் என்னும் நகரத்தரசன், ஏர் அணங்குறுக்கும் - இயற்கை எழிலை மேலும் அழகுறச்செய்யும், பைந்தார் - | |
| (பாடம்) 1. அந்தரத்தனைய கோமா. 2. வனத்து. | | |
|
|