பக்கம் : 552
 

     கின்னரப் பறவைகளைக் கட்டுதலைச் செய்யும், செய்கை - செயலையுடைய,
கிருதமாதனத்தைக் காப்பான் - கிருதமாதனத்தைக் காவல்செய்வான், கை நவின்று இலங்கும்
செவ்வேற் காவலன் - கையிடத்தே பொருந்தி விளங்கும் செவ்விய வேலையுடைய அரசன்,
கருடன் சேர்ந்த - கருடன் என்னும் சொல் சேர்ந்த, மெய் நவின்று இலங்கும் செம்பொன் -
உடலிடத்தே பொருந்தித் திகழும் செவ்விய பொன்னாலியன்ற, அங்கதம் - அங்கதம்
என்னும் சொல், விளைத்தபேரான் - தோற்றுவித்த கருடாங்கதன் என்னும் பெயருடையானும், (எ - று.)

     அங்கதம் - தோள்வளை. கருடன் சேர்ந்த அங்கதம் விளைத்த பேர். கருடாங்கதன்
என்பதாம். கிருத மாதனத்து மன்னனும் வெவ்வேலுடை யோனும் ஆகிய கருடாங்கதனும் என்க.
 

( 10 )

8. சித்திரதரன்

837.

ஓங்குநீர்ப் புரிசை வேலி யொண்டுறைக் குவளை வேய்ந்த
தூங்குநீ ருடுத்த பாங்கிற் 1சோபன முடைய தோன்றல்
தேங்குநீர்க் கடலந் தானைந் சித்திர தரனிவ் வையம்
தாங்குநீ ரொளியோ டொன்றித் தண்ணளி தயங்க நின்றான்.
 

      (இ - ள்.) ஓங்கும் நீர்ப்புரிசை வேலி-மிக்க நீரையுடைய அகழியையும்
மதில்களையும் வேலியாகவுடையதும், ஒண்துறை - ஒள்ளிய துறைகளை யுடைத்தாய்,
குவளை வேய்ந்த - குவளை மலர்கள் மூடப்பெற்ற, தூங்குநீர் உடுத்த - நிலையுற்ற நீர்
சூழ்ந்த, பாங்கில் - பக்க நிலங்களையுடையதும் ஆகிய, சோபனம் உடைய தோன்றல் - சோபனம் என்னும் நகரத்தையுடைய அரசனும், இவ்வையம் தாங்கும்நீர் - இவ்வுலகம்
முழுதையும் ஓம்புகின்ற தன்மையுடையதோர், ஒளியோடு ஒன்றி - புகழொடு பொருந்தி,
தண்ணளி தயங்க - குளிர்ந்த அருளுடைமைதிகழ, நின்றான் - நிலைத்து நின்றவனும்,
தேங்குநீர்க் கடலந்தானை - நீர்மிக்குத் தேங்கிய கடல்போலும் பெருக்க முடைய
படைகளையுடையவனும் ஆகிய, சித்திரதரன் - சித்திரதரன் என்பானும், (எ - று.)

     சோபன நகரத்து மன்னனும், தண்ணளியோனும், கடலந்தானையை யுடையயோனும் ஆகிய சித்திரதரனும், என்க.
 

( 11 )

சடிமன்னன் இவ் வெண்மரையும் அரசியலோம்பப்
பணித்தலும், படைகள் பண்ணுறுத்தலும்
838.

என்றிவ ரெண்மர் தம்மை யிரதநூ 2புரத்து ளானா
நின்றுநீர் காமி னென்று நிறீஇயபின் னீதி மன்னன்

 


     (பாடம்) 1. சோவன. 2. புரத்துள் யானா - புரத்துளானான்.