பக்கம் : 556
 

     (இ - ள்.) இன்இசை அமரர் பேர்கொண்டு - இனிய இசை வல்ல அமரர்
பேர்கொண்டு, இயன்ற மாநகரம் - தோன்றிய பெரிய அமரபுரம் என்னும் நகரத்தை, காக்கும்
- காவல் செய்பவனும், பொன்னவில் - பொன்னாலியன்ற, கடகம் பைம்பூண் - கடகம்
என்னும் அணிகலனை யுடையவனும் புரந்தரன் அனைய மாண்பின் - இந்திரனை ஒத்த
சிறப்புடை யவனும், மன்னவற்கு இளையவேந்தன் - சுவலனசடி வேந்தனுக்குத் தம்பியும்,
வயங்கு எரிதேர் பெயர் கொள்வோன் - திகழ்கின்ற நெருப்பும் தேரும் கூடிய சுவலனரதன்
என்னும் பெயரையுடையோனும் ஆகிய அரசன், கன்னியைக்காக்கும் நீர்மை -
சுயம்பிரபையைக் காத்துச் செல்லும் வண்ணம், கடற்படை பரப்பிச் சென்றான் - கடல்
போலும் தனது பெரிய படையை அணிவகுத்துப் போனான், (எ - று.)
சுவலனன் - நெருப்பு. சடிமன்னனின் தம்பியும், அமரபுரத்தரசனும், இந்திரன் ஒப்பானும்
ஆகிய சுவலனரதன் என்பான், சுயம்பிரபையைக் காவல் செய்வானாய்ப் பெரும்படையோடு
வந்தான், என்க.
 

( 17 )

வியாக்கிர ரதன் வருகை

844.

அங்கல மலர்ந்த தோன்ற லரிபுரத் தவர்கள் கோமான்
பொங்கல ரணிந்த பைந்தார்ப் புலிப்பெயர்ப் பொலங்கொ டேரான்
மங்கலக் களிற்றி னான்றன் மருமகன் மகர முந்நீர்த்
தங்கொலி மிகுத்த தானை 1யொடுகதி ரெறிப்பச் சார்ந்தான்.
 

      (இ - ள்.) அம் கலம் மலர்ந்த தோன்றல் - அழகிய அணிகலன்கள் திகழ்கின்ற
பெரியோனும், அரிபுரத்தவர்கள் கோமான் - அரிபுரம் என்னும் நகரத்தார்க்கு வேந்தனும்,
பைந்தார் - பசிய மாலையை அணிந்தவனும், புலி பொலங்கொள் தேர் பெயர்கொள்வோன்
- புலியும் தேரும் சேர்ந்துண்டாகிய வியாக்கிரரதன் என்னும் பெயரையுடையவனும்,
மங்கலக்களிற்றினான் தன் மருமகன் - நன்மை மிக்க யானைகளையுடைய சடிமன்னனின்
மருகனும் ஆகிய மன்னன், மகரமுந்நீர்தங்கு ஒலிமிகுந்த தானையொடு -
மகரமீன்களையுடைய கடலினது ஒலியினும் பார்க்க மிக்கொலிக்கும் படையோடு, கதிர்
எறிப்பச் சார்ந்தான் - சோதி திகழும் படி அப்படைகளுடன் வந்து கூடினான், (எ - று.)

     புவி - வியாக்கிரம். தேர் - ரதம். புலிதேர் பேர்கொள்வோன் வியாக்கிரரதன் என்க.
சடியின் மருமகனாகிய அரிபுரத்தரசன் வியாக்கிரரதன் என்பான் பெரிய படையோடே
வந்தான், என்க. களிற்றினான்-சடிமன்னன்.
 

 ( 18 )


     (பாடம்) 1. போர்கதிர் எறிப்பவந்தான்.