புடங்கடோறும் - நுனிகள்தோறும், மூரித்தண் சுடர்வெண்முத்தின் பரூஉத்திரள் முயங்கி ஞால - பெரிய குளிர்ந்த வெள்ளொளியையுடைய முத்தின் மாலைகளானாய பருத்த தொங்கல்கள் பொருந்தித் தூங்க, வேரித்தண் துவலை கால மாலைகள் விசித்தவன்றே-மண முடைய குளிர்ந்த தேன்துளிக்கும்படி மாலைகள் கட்டப்பட்டுள்ளன, (எ - று.) அவ்விமானம், பவழத் தூண்களையுடையதாய்ப் பளிங்குப் பலகையின் மேல் பொன் போதிகை பொருந்திய நுனிகளில் முத்துமாலைகள் தூங்கவிடப் பட்டதாய் மலர் மாலைகளால் ஒப்பனை செய்யப்பட்டதென்க. |
(இ - ள்.) தடுத்து வில் உமிழும் செம்பொன் தண்டிகை - இருள் புகாமற்றடுத்து ஒளிகாலும் செவ்விய பொன் தண்டிகைகளின், திரள்கள் தாங்க - கூட்டத்தைத் தாங்கி நிற்றற்கு, வயிரத்தம்பம் மடுத்தன - வயிரத்தூண்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மாடநீண் மதலைதோறும் - மேனிலை மாடங்களின் அமைந்த கொடுங்கைகள் தோறும், சுரும்புபாயும் துணர் அணி தயங்குமாலை தொடுத்தன - அளிகள் பாய்தலையுடைய பூங்கொத்துக்களாற் புனைந்து திகழும் மலர்மாலைகள் தொடுக்கப்பட்டுள்ளன, அடுத்தன - தம்பால் எய்தின, நிறத்தவாக - தமது நிறத்தை உடையனவாம்படி, மணிகள் - மணிகள், அழுத்தின - வைத்திழைக்கப்பட்டன, (எ - று.) மேலும் அவ்விமானத்தின்கண் பொற்றண்டிகை போக்கி வயிரத் தூண் நிறுத்தி மதலைதோறும், மலர்மாலை தொடுத்து மணிகள் அழுத்தப்பட்டன என்க. |