பக்கம் : 560 | | தொங்குவனவாகிய மணியாற் செய்யப்பட்ட மாலைகள், நகைமுகம் நிறைந்த சோதி கான்றன - தம் நகுகின்ற முகங்களில் நிறைந்துள்ள ஒளியை வீசின, கனக சாலம் - பொன்குவியல்கள், கலந்தன - தம்சோதியை அவற்றோடு கலந்து வீசின, கங்கணீகம் தோன்றின - கங்கையின் அலைகள் போன்று தோன்றியவாய, பதாகை - கொடிகளும், சூலம் ஞாயில் - சூலங்கள் ஞாயில் களும், சுடர்ந்தன - ஒளி வீசின, (எ - று.) கங்கணீகம் - கங்கையின் அலை. ஒளிமுகம் - முகப்பு. முகப்பின் கண் மணிமாலைகள் தூங்கி ஒளிபரப்பின என்க. | ( 24 ) | | 851. | அஞ்சிறைப் பறவைச் சாதி 1யாவிப்ப வணிந்து மேலாம் விஞ்சையர் மிதுனத் தேவர் விண்ணியங் குருவ 2மெல்லாம் செஞ்சுட ரெறிப்பச் சேர்ந்து செங்கதிர்ப் பரவை சிந்தி வெஞ்சுடர் 3விலங்க நீண்டு விண்ணிடை விரிந்த தன்றே. | (இ - ள்.) அம்சிறை - அழகிய சிறகுகளையுடைய, பறவைச் சாதி - பறவைக்கூட்டங்கள், ஆவிப்ப அணிந்து - ஏங்கிக் கொட்டாவி விடும்படி ஒப்பனைசெய்து, விசும்பின்மேலே விஞ்சையர் - வானின் கண் இயங்கும் விச்சாதரரும், மிதுனத்தேவர் - கந்தருவர்களும், விண்ணியங்கு உருவம் எல்லாம் - இன்னோரன்ன விண்ணில் செல்கின்ற உருவங்கள் எல்லாம், செஞ்சுடர் எறிப்பச்சேர்ந்து - தன்னுடைய செவ்விய சுடரைப் பிரதிபலிப் பனவாக அவற்றைத் தழீஇ, செங்கதிர்ப்பரவை சிந்தி - கதிரவனுடைய ஒளிப்பரப்பை மழுங்கச்செய்து, வெஞ்சுடர் விலங்க - வெவ்விய சுடர்களாகிய உடுக்கள் எல்லாம் அஞ்சி ஒதுங்கா நிற்ப, நீண்டு விண்ணிடை விரிந்தது அன்றே - விசும்பின்கண் நீண்டு விரிந்ததாம், (எ - று.) பறவைகள் பறக்குந் தொழிலில் யாம் இதனை ஒவ்வேம் என ஆவித்தன என்க. விசும்பின்மேலே இயங்கும் விஞ்சையரும் மிதுனத் தேவரும் என்க. வெஞ்சுடர் - ஞாயிறுமாம். இங்ஙனம் கொள்ளின் செங்கதிர்ப் பரவை என்பதற்குச் செவ்விய சுடராகிய கடல் என்க. | ( 25 ) | | 852. | வாரணி பசும்பொன் வாழை மரகதக் கமுகொ டோங்கித் தோரணத் தூண்க டோறுஞ் சுடர்மணி 4சிலம்ப நான்று நீரணி நிழல்கொண் முத்த மணன்மிசை நிரந்து தோன்றிப் பூரண குடங்கள் செம்பொற் கொழுங்கதிர் புதைந்த கீழால். | (இ - ள்.) கீழால் - அவ்விமானத்தின் தளத்திலே, வார் அணி பசும்பொன் வாழை - நீண்டு அழகிதாய பசும்பொன்னாலியன்ற | |
| (பாடம்) 1. ஆலிப்ப. 2. மேலாஞ். 3. விலங்கி. 4. சிலம்பி. | | |
|
|