பக்கம் : 566 | | | 862. | காவன்மிகு கன்னிநகர் கன்னியர்கள் காக்கும் வாவியகி னாறுமணி வாயிலவை நீங்கி நாவிகமழ் கொம்பனைய நங்கைநகை வேலான் தேவியமர் கோயிலது செவ்வன மடைந்தாள். | (இ - ள்.) கன்னியர்கள் காக்கும் - இளமகளிர்களால் காவல் செய்யப்பட்ட, காவல்மிகு கன்னிநகர் - காவற்றொழில் மிக்க கன்னி மாடத்தின், அகில் வாவிநாறும் - அகிற்புகை தாவிப்படர்ந்து மணங்கமழும், வாயிலவை நீங்கி - பல வாயில்களையும் கடந்து, நாவிகமழ் கொம்பு அனைய நங்கை - கத்தூரி மணங்கமழும் பூங்கொம்புபோலப் பொலிவுற்றுத் திகழும் சுயம்பிரபை, நகை வேலான் - ஒளியுடைய வேலேந்திய சடிமன்ன னுடைய, தேவியமர் - பெருந்தேவி வதியும், கோயிலது - அரண்மனையை, செவ்வனம் - நேரிதின், அடைந்தாள் - எய்தினாள், (எ - று.) சுயம்பிரபை கன்னிமாடத்தை அகன்று, தன் நற்றாயின் அரண் மனையை எய்தினாள் என்க. | ( 36 ) | | 863. | மௌவன்மலர் வேய்ந்துமது நாறுமணி யைம்பாற் கொவ்வைதுயில் கொண்டதுவர் வாய்க்கொடியொ டொப்பா டெய்வமண நாறுதிரு மேனிபுறங் காக்கு மவ்வையரொ டெய்திமுத லவ்வையடி சேர்ந்தாள். | (இ - ள்.) மௌவல்மலர் வேய்ந்து - முல்லைமலர் சூடப்பெற்று, மதுநாறும் - தேன்கமழ்கின்ற, மணிஐம்பால் - நீலமணிச் சுடர்க் கற்றையை ஒத்த அளகத்தையும், கொவ்வை துயில் கொண்ட - கொவ்வைக்கனிகள் படுத்துறங்குதல் போன்ற அதரங்களையும், துவர்வாய் - பவளம்போன்று சிவந்த வாயையும் உடைய, கொடியொடு ஒப்பாள் - பூங்கொடிபோன்ற சுயம்பிரபை, தெய்வமணம் நாறும் - தெய்வத்தன்மையுடைய மணங்கமழும திருமேனி புறங்காக்கும் அவ்வையரொடு - அழகிய தனது திருமேனியைப் பக்கத்தேயிருந்து காவல்செய்யும் செவிலித்தாயரொடு, எய்தி - சென்று, முதல் அவ்வையடி சேர்ந்தாள்-தன் நற்றாயின் திருவடிகளை அடைந்தாள், (எ - று.) மலர்வேய்ந்து மதுநாறும் ஐம்பாலையும், கொவ்வை துயில்கொண்ட வாயையும், உடைய கொடியொப்பாள் செவிலித் தாயரோடே சென்று தன் நற்றாயை வணங்கினள்; என்க. | ( 37 ) | | 856. | 864. வணங்கிய கனங்குழையை வாங்கிமுலை நோவக் குணங்கெழு குலத்தலைவி கொண்டுமிசை புல்லி மணங்கமழ் குழற்சிகையுள் வண்டிரிய மோந்தாங் கணங்கினனை யாளுவகை யாழ்கடலு ளாழ்ந்தாள். | | |
|
|