பக்கம் : 571
 

     பெட்டகம் - பெரும் பேழை. உயரிய அணிகலப் பெட்டக முதலிய எல்லாம் நிறைத்த
பின்னர், ஒளிபரவ ஆரவாரத்தோடே, அவ்விமானம் வானத்தே பறந்து செல்லலாயிற்
றென்க.
 

( 45 )

 
872.

முரச மார்த்தன முரன்றன முரிவளை
     முகிலிடை வயிரேங்க
வரியொ டாகுளி யாலித்த வதிர்ந்தன
     வணிமுழ வருகெல்லாம்
விரைசென் மாவொடு விரவின
     களிறுகண் மிடைந்தன கடுமான்தேர்
புரைசை யானையி னெருத்திடை
     யரசனும் புகழொடு பொலிவுற்றான்.
 

      (இ - ள்.) முரசம் ஆர்த்தன - முரசுகள் ஆரவாரித்தன, முரிவளை -
அரிந்துமுரித்த சங்குகள், முரன்றன - ஒலித்தன, முகிலிடை வயிர்ஏங்க - மேகங்களின்
இடையே கொம்புகள் முழங்காநிற்ப, அரியொடு ஆகுளி - மருதப்பறையுடனே சிறுபறை,
ஆலித்த - முழங்கின, அணிமுழவு அதிர்ந்தன - அழகிய மத்தளங்கள் முழங்கின,
அருகெல்லாம் - பக்கங்களில் எங்கும், விரை செல் மாவொடு - விரைந்து செல்லும்
இயல்பினவாகிய குதிரை களுடனே, களிறுகள் விரவின - யானைகள் கலந்தன, கடுமான்தேர்
- கடுகிச்செல்லும் குதிரைகளையுடைய தேர்கள், மிடைந்தன - நெருங்கின, அரசனும் -
இவற்றிடையே சடிமன்னனும், புரசை யானையின் எருத்திடை - கழுத்திடுகயிற்றையுடைய
யானையினது பிடரின்கண் வீற்றிருந்து, புகழொடு பொலிவுற்றான் - சான்றோர்தம்
புகழுரையோடு திகழ்ந்து தோன்றினான்,
(எ - று,)

     ஆகுளி - சிறுபறை. அவ்வழி, முரசம் முதலியன முழங்கின. மாவும் களிறும்
நெருங்கின, சடியரசன் யானையின் எருத்திடைப் புகழோடு விளங்கினன், என்க.
 

( 46 )

 
873.

சிகர யானையின் கவிழ்மணி சிலம்பின
     சிலம்பின பணிலங்கள்
முகர வாயின பணவங்கண் முரன்றன
     முரன்றன முகிலெல்லா
1மகர மால்கடல் வரைமிசை 2யெழுந்தென
     வெழுந்தது படைமாற்ற
நகர வாயிலின் புறம்பணை 3நடுங்கின
     நடுங்கின கொடி யெல்லாம்.
 

     (இ - ள்.) சிகரயானையின் கவிழ்மணி சிலம்பின மத்தக முடியையுடைய யானைகளின்
மருங்கே கவிழ்ந்து தூங்கும் மணிகள் ஒலித்தன, பணிலங்கள் சிலம்பின - சங்குகள்
ஒலித்தன, முகரவாயின - 


     (பாடம்) 1. மகர மாகடல். 2. யெழுந்தன. 3. நடந்தது நடுங்கின