பக்கம் : 573
 
 
875.

அமித மாகிய பெரும்படை யகன்கட லகல்விசும் பழகெய்த
அமித மாகிய பெருவரை 1நிமிர்சிகை யதனய லமர்ந்தேக
அமித மாகிய நிலைத்தலை மலையணி யருவிக ளவையெல்லாம்
அமித மாபவை சயம்பவைக் கடி 2தொழு தவையவை யறிவித்தாள்.
 

      (இ - ள்.) அமிதம் ஆகிய பெரும்படை - அளவிறந்த பெரிய படையாகிய,
அகன்கடல் - அகலிதாகிய கடல், அகல் விசும்பு அழகெய்த - விரிந்த விசும்பு
அழகுடைத்தாமாறு, பெருவரை நிமிர் - பெரிய மலைகளின் உச்சியில் நிமிர்ந்து நிற்கின்ற,
அமிதமாகிய சிகையதன் அயல் - எண்ணிறந்த கொடுமுடிகளின் பக்கத்தே, அமர்ந்து
ஏக-பொருந்திச் செல்லாநிற்ப, நிலத்தலை - பூமியின்மேல், அமிதமாகிய -
எண்ணிறந்தனனவாகவுள்ள, மலை அருவிகள் அணி அவை எல்லாம் - மலைகளும்
அருவிகளும் இன்னோரன்ன பிறவும் ஆகியவற்றின் இயல்புகளை எல்லாம், அமிதமாபவை -
அமிர்தப்பிரபை என்னும் தோழி, சயம்பவைக்கு - சுயம்பிரபைக்கு, அடிதொழுது
அறிவித்தாள் - அடிகளை வணங்கி அறிவிப்பாளாயினாள், (எ - று,)

     அமித மாபவை - அமிர்தப் பிரபை. இவள் சுயம்பிரபையின் உசாத்துணைத் தோழி
என்க. எண்ணிறந்த படைகள், அகன்ற விசும்பு அழகுறும்படி நெடிய மலைச் சிகரங்களில்
அண்மையின் ஏகாநிற்ப, நிலத்தின் கண்ணவாகிய மலை, அருவி, யாறு முதலியவற்றின்
இயல்பெலாம், சுயம்பிரபைக்கு அமிர்தப்பிரபை எடுத்துக் கூறத் தொடங்கினாள் என்க.
 

( 49 )

வழியிலுள்ள காட்சிகளை அமிர்தபிரபை
சுயம்பிரபைக்குக் கூறுதல்
கங்கைப் பேரியாறு
876.

நங்கை காணிது நம்மலைக் கும்பரப் பொன்மலைப் புடை 3வீழுங்
கங்கை யாறிதன் கரையன கற்பகக் காவுக ளிவைகண்டா
யிங்கு நாமிரு விசும்பிடை யியங்கலிற் சிறிய வொத் துளவேனு
மங்க ணார்க்குநம் முலகினை யளப்பவொத் துளவவை யறியுங்கால்

    

 

     (பாடம்) 1. நிமிர்மிகை. 2. தொழுதறிவித்தாள் - தொழுதுதவை அறிவித்தாள்.
3. வீழும். மேலும்.