பக்கம் : 576
 

     பாவாய் நம் முன்னர்த தோன்றும் யாறு, சிந்து என்னும் சிறந்ததொரு யாறாம்; அஃது
அலைகளாகிய தன் கைகளாலே, நுரைகளாகிய பூம்பந்துகளைப் புடைத்து, ஆட்டயர்தல்
போன்று தோன்றுதலைக் காண் என்றாள் என்க.
 

( 52 )

இதுவுமது
879.

உயருஞ் சந்தனப் பொழிலலைத் தொளிர்மணிக்
     1கலங்களை யுமிழ்ந்திட்டுப்
பெயருந் தெண்டிரைப் பிறங்கலுட் பிணங்கிய
     பெருவரை யகிறேக்கி
வயிர வேதிகை மலைவது கோபுர
     வாய்தலின் படிதீண்டி
அயிரை வார்கரைக் குடகடற் றிரையொடு
     பொருதல தவியாதே.
 

      (இ - ள்.) உயரும் சந்தனப் பொழில் அலைத்து - உயர்ந்தோங்கிய
சந்தனச் சோலைகளை முறித்து, ஒளிர்மணிக் கலங்களை உமிழ்ந்திட்டு - சுடருகின்ற
மணிகளாகிய அணிகலன்களை எறிந்து, பெயரும் தெண்டிரைப் பிறங்கலுட் பிணங்கிய
பெருவரை அகில்தேக்கி - இயங்கும் தனது தெளிந்த அலைப் பெருக்கத்துள் தன்னொடு
மாறுபட்ட பெரிய மலையிடத்தனவாகிய அகில் முதலியவற்றைக் கவர்ந்து
நிறைத்துக்கொண்டு, வைர வேதிகை மலைவது - சுரமை நாட்டிலுள்ள வயிரத்தாலியன்ற
தெற்றிகளை மோதுவதாய், கோபுர வாய்தலின் படிதீண்டி - போதன நகரத்து
அரண்மனையின் கோபுர வாயிற்படியைத் தொட்டு, அயிரை வார் கரைக் குடகடல்
திரையொடு - நுண்ணிய கருமணல் பரந்த நெடிய கரையையுடைய மேற்றிசைக் கடலின்
அலைகளோடே, பொருதல தவியாதே - போர் செய்தவிதலன்றி இடையே அமைவில்லாதது,
(எ - று)

     இவ்வியாறு, சந்தனப் பொழிலலைத்து, மணிக்கலமுமிழ்ந்து, வரையகில்
தேக்கி, வேதிகை மலைந்து, கோபுர வாயிற்படி தீண்டி குடகடலில் விழும் என்றாள,் என்க.
 

( 53 )

 
880.

தேனெய் பாலொடு கலந்தன சின்மொழிச்
     சிறுநுதற் றிருவேநஞ்
சேனை மாமுகிற் படலங்கண் 2மிசைச்செலச்
     சினைமுகில் முரலக்கேட்
3டேனை யானைக ளிணையன விருந்திட
     விருங்கைமா வினங்காக்கும்
4கான யானைகள் கருவரை யனையன
     கனல்வன விவை காணாய்.

 


     (பாடம்) 1. கலன்களை 2. மிசைச் செல்வன 3. டேனை யாணையள் 4. கானயானைள்