(இ - ள்.) தேன் நெய் பாலொடு கலந்தன - தேனையும் நெய்யையும் தீம்பாலோடு அளாயது போன்று சுவைதரும், சின்மொழி - சிலவாய மொழிகளையும், சிறுநுதல் - சிறய நெற்றியையும் உடைய, திருவே - திருமகளே!, நம் சேனை - நம்முடைய படைகள், மாமுகிற் படலங்கள் மிசைச் செல - கரிய மேகக்குழாங்களின் ஊடே செல்வனவாக, சினை முகில் - கருவுற்ற முகில்கள், முரல்வ கேட்டு - முழங்குதலைக் கேட்டு, ஏனை யானைகள் இணையென இருந்திட - மற்ற யானைகள் தத்தம் இணையாகிய யானைகளே பிளிறுவன எனக்கருதி வாளாவிருப்ப, இருங்கை மாவினம் காக்கும் - பெரிய துதிக்கையினையுடைய யானைக் கூட்டங்களை ஓம்பும், கான யானைகள் - காட்டியானைகளாகிய யூதநாதன் என்னுங் களிறுகள், கருவரை அனையன - கரிய மலையை நிகர்ப்பன, கனல் வன - தத்தம் பகை யானைகள் பிளிறுவனவாகக் கொண்டு சினப்பன, இவை காணாய் - இவற்றையும் காண்க, (எ - று.) காக்கும் கானயானை என்றது யூதநாதர்களை, திருவே! சினைமுகில் முழங்குதல் கேட்டுக் காட்டியானைகளின் தலைமை யானைகள் பகையானை பிளிறுவனவாகக் கருதிச் சினப்பதனைக் காண் என்றாள், என்க. |
(இ - ள்.) பாவாய் - பாவை போன்றவளே!, பேய் மையானம் கொண்டிருந்தன்ன - கரிய பேய்கள் நன் காட்டில் நின்றாற்போன்று நிற்கின்ற, பெருவரை - பெரிய மலைகள், நெரிதரத் திரை சிந்தி் - நெரிந்து போகும்படி அலைகளால் மோதி, தீமை யானைகள் - தீயனவாகிய காட்டியானைகளின், செவியுகு - செவி முதலியவற்றில் ஊறிப் பொழிகின்ற, செறிகடாம் - செறிந்த மதநீர், திளைத்தலில் - கலத்தலாலே, திசைநாறி - திக்குகளில் மணம் வீசி, போய் - ஒழுகி, மையானம் கொண்டு - கரிய மரக்கலங்களைத் தன்பாற் |