பக்கம் : 578
 

     கொண்டு பெருந் திசைப்புடையன - பெரிய திக்குளில் உளவாய, புனல்யாறு - வேறு
பல நீர் யாறுகள், சேய்மையான் - சேய்மைக்கண் கிடந்து தோன்றுவனவாகலின் அவைகள்,
நமக்கு ஒளிர்முத்தின் - சுடர்வீசும் முத்துக்களால் இயன்ற, பருவடம் - பெரிய வடங்கள்
கிடந்து தெளிப்ப ஒத்துள - விளங்குவன போன்றுள்ளன, (எ - று,)

     யானம் - மரக்கலம். பெரியவரைகளை நெரித்து யானை மதம் கமழ, மரக்கலங்களைக்
கொண்டு ஒழுகா நின்ற யாறுகள், பல சேய்மைக் கண்ணேமாகிய நமக்கு, நித்திலக்
கோவைகள் கிடந்து திகழுமாப் போலே, தோன்றுதல் காண்! என்றாள் என்க.
 

( 55 )

 

882.

கருவி வானத்தி னகடுதொட் டனவென
     நிலத்திடைக் கவின்செய்ய
மருவி நங்கட்கு மணிவட்டுச் சிதர்ப்பவொத்
     துளசில மலையெல்லாம்
அருவி வெண்டிரை சொரிகின்ற வருவரைக்
     குவடுக ளவைமுன்னாற்
பரவை வெண்கொடி யெடுத்துநம் படைக்கெதி
     ரெழுவதொத் துளபாவாய்.
 

      (இ - ள்.) நிலத்திடை - நிலத்தின்கண் நின்றுநோக்குவார்க்கு, கருவி வானத்தின் -
முகில் இடி மின் முதலிய தொகுதிகளையுடைய விசும்பினது, அகடு தொட்டன எனக் கவின்
செய்ய - நடுவிடத்தை எய்தின வென்று கூறும்படி அழகு செய்வனவாகவும், மருவி -
பொருந்தி, நங்கட்கு - விசும்பிடத்துச் செல்லும் நம் கண்களுக்கு, மணிவட்டுச் சிதர்ப்ப
ஒத்துள - மணிகளானியன்ற சூதாடு கருவிகளாகிய வட்டுக்கள் பரப்பி வைத்துளபோலத்
தோன்றுவனவாய, சில மலை எல்லாம் - சில மலைகளின் உச்சியில் எல்லாம், அருவி
வெண்டிரை சொரிகின்ற -அருவியாக வெள்ளிய நீர்த் திரளைச் சொரிகின்ற - அருவியாக
வெள்ளிய நீர்த் திரளைச் சொரிகின்ற, அருவரைக் குவடுகள் - எய்துதற்கரிய
மலைச்சிகரங்களாகிய, அவை - அவையனைத்தும், பரவை வெண்கொடி எடுத்து - பரவிய
வெள்ளைக் கொடிகளை உயர்த்திக்கொண்டு, நம் படைக்கு எதிர் எழுவது - நம்
படைகளுக்கு எதிராகப் பகை மேற்கொண்டு எழுந்து வருதலை, ஒத்துளது பாவாய்! ஒப்பாகத்
தோன்றுகின்றது காண் சுயம்பிரபாய், (எ - று.)

     வெளிய அருவியோடே மிளிருகின்ற மலையின் கொடுமுடிகள், நம் விமானம்
இயங்குதலால், தாம் நம் மெதிர் கொடியோடே பகைவர் இயங்குமாப் போன்று
இயங்குவனவாகத் தோன்றுதலைக் காண் என்றாள் என்க.
 

( 56 )