பக்கம் : 579
 
 
883.

அலங்கல் வார்குழ லமிர்தன்ன சின்மொழி
     யரிவைநம் மருங்கெல்லாம்
விலங்கல் போல்வன வெண்மருப் பிரட்டைய
     வேழங்கள் விளையாடி
இலங்கு மால்வரை யிறுவரைத் தடங்குத்தி
     யிடந்திட விருபாலுங்
1கலங்கொள் பேழைகள் கவிழ்ந்தெனக் கதிர்மணி
     சொரிகின்ற வவைகாணாய்.

      (இ - ள்.) அலங்கல் வார்குழல் அமிர்தன்ன சின்மொழி அரிவை -
மலர்மாலையணிந்த நீண்ட அளகத்தையுடைய அமிழ்தம்போலும் சிலவாகிய இனிய
மொழிகளை மிழற்றும் சுயம்பிரபாய்! நம் மருங்கு எல்லாம் - நம் பக்கத்தில் எங்கும்,
விலங்கல் போல்வன - மலைகளை ஒத்தனவும், வெண் மருப்பு இரட்டைய - வெண்மை
நிறமான இரு கோடுகளையுடையனவும் ஆகிய, வேழங்கள் - யானைகள், விளையாடி -
தம்முள் விளையாடுதலைச் செய்து, இலங்குமால்வரை - விளங்குகின்ற பெரிய மலைகளையும
இறுவரைத் தடம் - அம்மலைகளின் பக்க மலைகளையும், குத்தி யிடந்திட - தம் கோட்டாற்
குத்திப் பெயர்க்க, இருபாலும் - அங்ஙனம் குத்திப் பெயர்க்கப்பட்ட இருமருங்குகளினும்,
கலங்கொள் பேழைகள் கவிழ்ந்தென - அணிகலப்பேழைகளைக் கவிழ்த்தாற்போல,
கதிர்மணி சொரிகின்ற அவை - சுடருடைய மணிகளைச் சொரிவதாய அக்காட்சிகளையும்,
காணாய் - காணுதி, (எ - று.)

     அரிவையே! நம்மருங்கு வேழங்கள் விளையாடி, மலையிடைக் குத்திப்
பெயர்த்தனவாக, அம்மலைகள், அணிகலப் பேழையைக் கவிழ்த்தாற் போன்று மணிகளைச்
சொரிவன காண் என்றாள், என்க.
 

( 57 )

 
884.

அங்கண மால்வரை 2யருவிதந் தடக்கையிற்
     புடைத்துநின் றமர்ந்தாடிப்
பைங்கட் செம்முகப் பரூஉக்கையம் 3பகடுதம்
     பாற்பிடிக் கணஞ்சூழச்,
செங்கற் றூளிதஞ் செவிப்புறத் தெறிதலிற்
     4சிகரங்க ளிடையெல்லாம்,
பொங்கிக் குங்குமப் பொடியொத்துப் பொலிகின்ற
     பொலங்கொடி புடை நோக்காய்.

    

 

     (பாடம்) 1. கலம்பெய். 2. செவியுறத். 3. பகடுதம் பிடிக்கணம் புடைசூழ
4. சிகரங்கொள் புடையெல்லாம்.