கோதாய்! வானத்தி லியங்குதலைக் குறிக் கொள்ளாத சில தேர்வலவர், பளிங்குச் சிகரங்கள் தம்முன்னர் உள்ளமை அறிகிலாது, அவற்றிடைத் தம் தேரைச் செலுத்தி, வழியன்மையால், மீளவும் அத்தேர்களைத் திருப்பிச் சுழலும் வகை ஓட்டுதலைக் காண் என்றாள் என்க. |
(இ - ள்.) எடுத்த மாருதம் எறிதலின் நெகிழ்ந்தன - விரைதலை மேற்கொண்ட காற்று மோதியடித்தலாலே கட்டவிழ்ந்து தளர்ந்தனவாகிய, இணரோடும் தொடுத்த சிகழிகை - கொத்துக் கொத்தாய் வைத்துக்கட்டிய கொண்டைப்பூச்செண்டும், துணர்கொளப் புனைவன மாலைகள் - கொத்துக் களை வரிசையில் வைத்துப் புனைந்த மலர்மாலைகளும், இடைதுகில் - இடையில் உடுத்த மென்றுகில்களும், புடைசோர - இடங்களினின்றும் நழுவி வீழ்ந்துவிட, உடுத்த காஞ்சியின் ஒளிமணிக் கதிர்நகைப் பட்டங்கள் உடையாக - திண்ணிதின் உடுத்தப்பட்ட கோவைமணி அணியாகிய காஞ்சி முதலிய அணிகலன்களே ஆடையாகக்கொண்டு, அடுத்து - மகளிர் கூட்டத்தை அடுத்து, வீழும் - நாணத்தால் அம்மகளிருள் வீழ்கின்ற, ஓர் அணியிழை - அழகிய அணிகலனுடையாள் ஒருத்தி, படுகின்றது அது காணாய் -படுகின்ற அலமரலாகிய அதனுள் காண்க! (எ - று) காஞ்சி - ஆடைக்குள் அணியும் ஓரணிகலம். பெருங்காற்று வீசுதலாலே ஒருத்தி அணிந்திருந்த மலர்மாலைகளும் துகிலும் நழுவி விழுந்துவிட்டனவாக, காஞ்சி என்னும் மணியணிகலனே ஆடையாக, தன் மருங்கு நிற்கும் மகளிர் குழாத்துள்ளே நாணி வீழ்வாளின், அலமரலைக் காண் என்றாள், என்க. |