பக்கம் : 582
 
 
887.

மல்கு 1மும்மத மழகளி றுழக்கலின்
     மயங்கிய மழைமேகம்
பில்கு நுண்டுளி யுறைத்தலிற் பனித்தநம்
     பெரும்படை மடவார்கள்
நல்கு காதல ரகலத்து ளொடுங்குதல்.
     பலர்முன்னை நனிநாணி
மெல்கு பூந்துகில் 2விரித்தவா வருகின்ற
     விதலைகண் மிகநோக்காய்.
 

      (இ - ள்.) மல்கு மும்மதம் மழகளிறு உழக்கலின் - பெருகுகின்ற மூன்று
மதங்களையும் உடைய இளமைமிக்க களிற்றியானைகள் புகுந்து துகைத்தலாலே, மயங்கிய
மழை மேகம் - மயக்கமடைந்த மழை நீரையுடைய முகில்கள், பில்கும் நுண்டுளி
உறைத்தலில் - உதிர்க்கின்ற நுண்ணிய நீர்த் துளிகள் வீழ்தலாலே, பனித்த நம் பெரும்படை
மடவார்கள் - நடுக்கத்தையுற்ற நமது பெரிய படைக்கண் உள்ள சில மகளிர்கள், நல்கு
காதலர் அகலத்துள் ஒடுங்குதல் - அந்நடுக்கம் தீருமாறு அருள்வழங்கும் தம் காதலர்
அயலினராகவும் அவர்தம் மார்பகத்தே அணைந்து ஒடுங்குதலை, பலர் முன்னை நனி நாணி
- அயலார் பலர் பார்த்தலை மிக மிக நாணியவராய், மெல்கு பூந்துகில் விரித்தவா வருகின்ற
- மென்மையால் அந் நீர்த்துளி வீழ்ச்சிக்கு அரணாகாத அழகிய ஆடையையே (அரணாவது
போல) விரித்துத் தடுத்தவாறே, வருகின்ற விதலைகள் - வருவதாகிய இன்னல்களையும் மிக
நோக்காய் - நன்கு காண்க!. (எ - று.)

     நங் களிற்றுக் குழாங்களா லுழக்குண்ட முகில்கள், நீர்த்துளியை வீசுதலாலே, குளிரால்
நடுங்கிய மகளிர்கள், அக்குளிர்தீர அரணாகும் காதலர் அயலில் உளராகவும், அயலார்
காணுதலை நாணி, அவர் அகலத்தே அணைந்தொடுங்காமல், குளிர்க்கு அரணாகாத
மென்றுகிலை விரித்தவாறே நடுங்குவாரைக் காண் என்றாள், என்க.
 

( 61 )

 
888.

இலைய நாடகத் 3தெழில்கெழு விமானமஃ
     தியல்கின்ற விசைதன்னான்
மலையி னம்மொடு வருவவொத் துளவவை
     வரவில மடனோக்கி
உலைவில் வையகத் தொளிசெயும் பகலவ
     னூறுசுடர் சொரிகின்ற
வலையங் கையல வருவது மற்றிதன்
     சலத்தது வலிகண்டாய்.

    

 

     (பாடம்) 1. மும்மதமும். 2. விரித்தவர். 3. தெழில்கின்ற விமான மிஃதிள.