பக்கம் : 583
 

     (இ - ள்.) எழில் கெழு விமானம் - அழகு பொருந்திய இவ்விமானம், இலைய
நாடகத்து - இலயத்துடன் ஆடும் கூத்தின் இயக்கம் ஒப்ப, இயல் கின்ற விசை தன்னால் -
இயங்குகின்ற வேகம் உண்மையால், உலைவில் வையகத்து ஒளிசெயும் பகலவன் -
கெடுதலில்லாத உலகிற்கு ஒளிதருகின்ற கதிரவன், உறு சுடர் சொரிகின்ற - பொருந்திய
ஒளியை வீசுகின்ற; வலையம் - நில வட்டமும், மலையினம்மொடு - மலைக்கூட்டங்களும்,
வருவ ஒத்துள - இயங்குதலை ஒத்துத் தோன்றுகின்றன, மடன் நோக்கி - மடப்பமுடைய
பார்வையுடையவளே!, அவை வரவில - அவைகள் உண்மையில் அங்ஙனம் வருவனவல்ல,
கையல - தொழிற்படுவனவல்லவாய அவைகள், வருவது - வருவனப்போலத் தோன்றுவது
எற்றாலெனின், மற்றிதன் வசத்தது வலி கண்டாய் - இவ்விமானத்தின் இயக்கவன்மையால்
உண்டாயதொரு மயக்கக் காட்சியே காண் ! (எ - று.)

     மடனோக்கி! நம் விமானம் இயங்குதலாலே, நிலமும் மலைகளும் இயங்குவன போலத்
தோன்றுகின்றன; நிலையியற் பொருளாகிய அவைகள் உண்மையில் இயங்காதனவாகவும்,
இயங்குவன போற்றோன்றுவது மயக்கக் காட்சியே என்றாள், என்க.
 

( 62 )

 
889.

சடி முதலியோர் போதன நகர்க்கண் உள்ள
     திருநிலையகத்தை எய்துதல்
இன்ன போல்வன விளையவட் குழையவ
     ளினியன பலகாட்டிப்
பன்னு மாயிடைப் பழனங்கள் வளாவிய
     படுகலி 1நெடுநீத்தம்
துன்னு நீர்வயற் சுரமியத் தகணியுட்
     சுடரணி நகர்சார்ந்து
தென்னன் றேனிமிர் திருநிலை யகமெனுஞ்
     செறிபொழி லதுசேர்ந்தார்.
 

      (இ - ள்.) இன்ன போல்வன - இவைபோன்ற காட்சிகள், இளையவட்கு -
சுயம்பிரபைக்கு, உழையவள் - தோழியாகிய அமிர்தபிரபை, இனியன பலகாட்டி - இனிய
பலவற்றைக் காட்டி; பன்னும் ஆயிடை - விளக்கும் பொழுது, பழனங்கள் வளாவிய -
வயல்கள் சூழ்ந்த, கலிபடு நெடுதீத்தம் - ஆரவாரிக்கின்ற நெடிய நீர்ப்பெருக்கு, துன்னும்
நீர் வயல் - செறிந்த நீர் வளமிக்க வயல்களையுடைய, சுரமியத்து - அகணியுள் - சுரமை
நாட்டின் அகத்தேயுள்ள, சுடர் அணி நகர் சார்ந்து - ஒளியால் அழகுற்ற போதன

 


     (பாடம்) 1. கெடுநீத்தம்.