பக்கம் : 585
 

     யானை மதங்களை யுண்டு மயக்க மெய்திய வண்டுகள் அவற்றின் பிடரில்
அணிந்துள்ள கண்ணியில் புரண்டு கிடந்தன என்க. கண்ணியிடை, கண்ணிடை என இடைக்
குறைந்து நின்றது,
 

( 65 )

 
892.

முந்தி 1நின்றிமிர் தேன்முரன் றாக்கிய
மந்த வின்னிசை வாங்க வனத்திடைச்
சந்த னத்தடந் தாளொடு சார்ந்தன
2கந்தி னைக்கன லுங்களி யானையே.
 

      (இ - ள்.) முந்தி நின்று இமிர் தேன் - முற்பட்டு நின்று ஒலிக்கின்ற அளிகள்,
முரன்று ஆக்கிய - பாடி எழீஇய, மந்த இன்னிசை - மெல்லிய இனிய பாட்டை, வாங்க -
தம் செவியேற்று மகிழும்பொருட்டு, கந்தினைக் கனலும் களியானை - கட்டுந்தறியைச்
சினந்து முறிக்கின்ற மதக்களிப்பையுடைய யானைகள், வனத்திடை - அப் பூம்பொழிலின்
அகத்தே, சந்தனத் தடந்தாளோடும் சார்ந்தன - சந்தன மரங்களின் பெரிய அடிப்குதியிலே
கட்டப்பட்டன, (எ - று.)

     வண்டுகள் மந்த இசை (மெலிவிசை எனினுமாம்) யிலே பாடுதலாலே, அவ்விசையைச்
செவியேற்று மகிழும் பொருட்டு யானைகள் சந்தனமரத்திற் கட்டப்பட்டன என்க.
 

( 66 )

 
893.

குங்கு மக்குளிர் பூநெரி தூளிமேற்
பொங்கு ளைக்கலி மாக்கள் புரண்டுவிற்
3றங்கொ ளிப்பல கைத்தலம் பாவிய
மங்க லப்பெரும் 4பந்தியின் வந்தவே.
 

     (இ - ள்.) பொங்கு உளைக் கலிமாக்கள் - மிகுந்த பிடரி மயிரையுடைய குதிரைகள்,
குங்குமக் குளிர் பூநெரி தூளிமேல் புரண்டு - குங்கும மரங்களின் குளிர்ந்த பூக்கள்
உதிர்த்த பூந்துகள்மேல் படுத்துப் புரண்டு எழுந்து, வில் தங்கு ஒளிப்பலகைத்தலம் பாவிய - ஒளிதங்கிய பளிங்குக் கல்பரப்பிய, மங்கலப் பெரும்பந்தியின் வந்த - மங்கலமுடைய பெரிய
கொட்டில்களிடத்தே வந்தன, (எ - று.)

     குதிரைகள் குங்குமப் பூந்துகளிற் புரண்டெழுந்து பளிங்கு பரப்பிய சிறந்த பந்தியுள்
வந்து சேர்ந்தன என்க.

     நெரிதூளி : வினைத்தொகை.
 

( 67 )
894.

பட்ட மார்நெடுந் தேர்பைம்பொ னான்மிடை
கொட்டில் சேர்ந்தன கோனுறை கோயிலும்

 


     (பாடம்) 1. நின்றமிர் தெனமுரன். 2. கந்தன - கந்தென. 3. தங்கொளிர்.
4. பந்தியடைந்தவே.