பக்கம் : 586 | | | | வட்ட மாக வகுத்தனர் வானுல கிட்ட மாய்வந் திழிந்தது போலுமே. | (இ - ள்.) பட்டம் ஆர் நெடுந்தேர் - பொற்பட்டங்கள் பொருந்திய தேர்கள், பைம்பொன்னால் மிடை - பசிய பொன்னால் வேயப்பட்ட, கொட்டில் சேர்ந்தன - தேர் நிலையமாகிய கொட்டில்களை எய்தின, கோன் உறை கோயிலும் - அரசனாகிய சடிமன்னன் வதிதற்குரிய அரண்மனையும், வான் உலகு இட்டமாக வந்து இழிந்தது போலும் - தேவருலகம் இவண் வந்திருத்தலை விரும்பி இறங்கியதைப்போன்று தோன்றுமாறு, வட்டமாக வகுத்தனர் - வட்டவடிவிற்றாய் இயற்றுவாராயினர், (எ - று.) பைம்பொன் வேய்ந்த கொட்டிலைத் தேர்கள் எய்தின, சடிமன்னன் உறைதற்கென வகுத்த கோயில் வட்டவடிவிற்றாய், வானவ ருலகம் வந்திறங்கியதை ஒத்ததென்க. | ( 68 ) | | 895. | செம்பொன் மாளிகை யும்வயி ரத்திரட் ட 1ம்ப முற்ற தமனியக் கூடமு மம்பொன் னாடரங் கும்மகிற் சேக்கையும் வம்பு நீர்மைய வாய்வளங் கொண்டவே. | (இ - ள்.) செம்பொன் மாளிகையும் - செவ்விய பொன்னாலியன்ற மாளிகைகளும், வயிரத்திரள் தம்பமுற்ற - வயிரம் என்னும் மணியாற்றிரண்ட தூண்களையுடைய, தமனியக்கூடமும் - பொன்னம்பலங்களும், அம் பொன் ஆடரங்கும் - அழகிய கூத்தாடுதற்குரிய பொன்அரங்கிடங்களும், அகிற் சேக்கையும் - அகிற்புகை கமழும் படுக்கை யிடங்களும், வம்பு நீர்மையவாய் - புதுமைத் தன்மை பொருந்தியனவாய், வளங்கொண்ட - வளப்பங்கொண்டமைந்தன, (எ - று.) மாளிகையும், தமனியக் கூடமும், ஆடரங்கும், படுக்கை யிடங்களும் புதிய முறையிலே அவ்வரண்மனைக்கண் அமைக்கப்பட்டுள்ளன, என்க. | ( 69 ) | 896. | 2தெள்ளு வண்பவ ழத்திர ளூன்றிய வெள்ளி மண்டப மும்விரை நாறுப பள்ளி யம்பல மும்பகற் கோயிலும் வள்ள னன்னகர் வாய்மலி வுற்றவே. | |
| (பாடம்) 1. தமுற்ற மணியகக் கூடமும். 2. தெள்ளிவெண் பவ. | | |
|
|