விட்டது - தங்கியது. சடிமன்னன் படை அவன் அரண்மனையைச் சூழ்ந்து தங்கிற்று; ஏனைமன்னர் அப்பொழிலின்புறத்தே தத்தமக்கு விருப்பமுள்ள இடங்களிலே தங்கினர் என்க. |
( 72 ) |
|
899. | கன்னி மூதெயில் சூழ்கடி காவினுட் கன்னி தாதைகண் ணார்நக ரிஞ்சியுட் கன்னி மார்பலர் காக்குங் கடையதோர் கன்னி மாநகர் கன்னிக் கியற்றினார். |
(இ - ள்.) கன்னி மூதெயில் சூழ் கடி காவினுள் - அழிவில்லாத பழைதாகிய மதிலாற் சூழப்பட்ட மணமிக்க - அப்பூம்பொழிலின்கண், கன்னி தாதை கண் ஆர்நகர் இஞ்சியுள் - சுயம்பிரபையின் தந்தையாகிய சடிமன்னனுடைய இடமகன்ற அரண்மனை மதிலின் அகத்தே, கன்னிமார் பலர் காக்கும் கடையது - கன்னியராகிய காவல் மகளிர் பலரால் பாதுகாத்தலையுடைய தலைவாயிலையுடைத்தாகிய, ஓர் கன்னிமாநகர் - ஒரு கன்னிமாடம், கன்னிக்கு இயற்றினார் - சுயம்பிரபைக்கு இயற்றினார்கள், (எ - று.) கன்னிமூதெயில் என்றார் ஒருவராலும் ஒருகாலத்தும் தாக்கப்படாத பழைய திண்மதிலென்றற்கு. அம் மதிலினூடே, கன்னிக்குக் கன்னிமாடம் கண்டனர், என்க. |
( 73 ) |
சுயம்பிரபை கன்னி மாடத்தை யடைதல் |
900. | மின்னி னார்ந்த விமானத் தலத்திடைப் பொன்ன னார்பலர் போற்ற விழிந்துதன் மன்ன னாரரு ளான்மணி மாளிகைக் கன்னி மாநக ரெய்தினள் கன்னியே. |
(இ - ள்.) தன் மன்னன் ஆர் அருளான் - தன் தந்தையாகிய சடிமன்னனது பெறற்கரிய அருள்பெற்று, பொன் அனார் பலர்போற்ற - திருமகளை ஒத்த மகளிர் பலர் போற்றெடுப்ப, மின்னின் ஆர்ந்த விமான தலத்திடை இழிந்து - மின்னல்போன்ற ஒளியுடைய விமானத்தை விட்டிறங்கி, தன்மணி மாளிகைக் கன்னிமாநகர் - தனக்கென்றியற்றிய மணிகள் இழைத்த மாளிகையாகிய அக்கன்னிமாடத்தை, கன்னி எய்தினள் - சுயம்பிரபை அடைந்தாள், (எ - று.) சடிமன்னனின் அருளோடே சுயம்பிரபை விமானத்திழிந்து அக் கன்னிமாடத்தை எய்தினள் என்க. |
( 74 ) |
சடிமன்னன் முதலியோர் வருகையை மரீசி பயாபதிக்குணர்த்தல் |
901. | மற்றவ ரிருத்தலு மருசி சென்றுபின் சுற்றுநீர் வளவயற் சுரமை நாடுடைக் கொற்றவன் கழலடி தொழுது கூறலும் வெற்றிவே லவனொளி துளும்ப வீங்கினான். |
|