பக்கம் : 589 | | (இ - ள்.) மற்று அவர் இருத்தலும் - இவ்வண்ணமாகச் சடியரசன் முதலியோர் திருநிலையகத்தே வதிந்தனராக, பின் மருசி சென்று - பின்பு மரீசி என்னும் தூதன்போய், சுற்று நீர் வளவயல் சுரமைநாடுடை - நீர்சூழ்ந்த வளவயல்களையுடைய சுரமைநாட்டையுடைய, கொற்றவன் கழலடி தொழுது - பயாபதி மன்னன் வீரக்கழலணிந்த திருவடிகளை வணங்கி. கூறலும் - தம்மவர் வருகையை அறிவித்தவுடன், வெற்றிவேலவன் - வெற்றி வேலேந்தும் பயாபதி மன்னன், ஒளிதுளும்ப வீங்கினான் - மகிழ்ச்சியால் உடலம் ஒளிகாலப் பூரிப்படைந்தான், (எ - று.) மருசி - முன்னர்த் தூதுவந்த விஞ்சையன். இவ்வாறு திருநிலையகத்தே சடி முதலியோர் இருப்ப, இச்செய்தியை மரீசி பயாபதிக்குக் கூற அவன் மிக்க மகிழ்ச்சி யுடையவன் ஆயினன், என்க. | ( 75 ) | பயாபதி, தன் நகரை ஒப்பனை செய்வித்தல். | 902. | ஏரணி மணிக்கல மணிக யாருமென் தாரணி1வளநக ரறைக கோடணை தோரணந் திசைதொறுஞ் சுடர நாட்டுக பூரண பொற்குடம் பொலிய வைக்கவே. | இதுமுதல் 4 செய்யுள்கள் ஒரு தொடர் (இ - ள்.) யாரும் - நம் அன்பிற்குரிய மக்கள் எல்லோரும், ஏர் அணி மணிக்கலம் அணிக - அழகிய மணிகளான் ஆய அணிகலன்களை அணிந்து கொள்க, மென் தார் அணி வளநகர் கோடணை அறைக - மெல்லிய பூந்தொடையல்களால் அழகுறுத்தப்பட்ட நம் வளப்பமுடைய நகரமெங்கும் முரசறைந்து இதனை உணர்த்துக, திசைதொறும் தோரணம் சுடர நாட்டுக - எல்லாத் திசைகளினும் தோரணங்கள் ஒளிறுமாறு கட்டுக, பூரண பொற்குடம் பொலியவைக்கவே - யாண்டும் பொன்னாலாய நிறைகுடங்கள் வைக்க, ஏ: அசை, (எ - று,) பயாபதி இச்செய்தியை முரசறைந்து தெரிவிக்கவும் நகரத்தை ஒப்பனை செய்யுமாறும் பணித்தான் என்க : | ( 76 ) | | 903. | இரவல ரிருநெதி கவர்க 2வீண்டியற் புரவலர் வருகெனப் போக தூதுவர் திருவலர் சினகரன் செல்வப் பொன்னகர் விரவலர் மழையொடு விழவு செய்கவே. | | |
| (பாடம்) 1. வளநகர் அறி. 2. ஈண்டயற். | | |
|
|