பக்கம் : 591
 

      என்னுமொரு செய்யுள் ஒரு பிரதியிற் காணப்படுகின்றதென்று அடையாற்றுச்
சூளாமணிப் பதிப்பில் (பக்கம் 347) கூறப்பட்டுள்ளது.
 

( 78 )

 
905.

உழைக்கல மகளிரொ டுவந்து செல்வன
புழைக்கைய விளம்பிடி புகுந்து பண்ணுக
தழற்புகை நவின்றகைத் தானை வீரர்தம்
1மழற்படை யொடுபுகுந் தமைக காவலே.
 

     (இ - ள்.) உழைக் கல மகளிரொடு உவந்து செல்வன - அம்மகளிரோடு உடன்
செல்லற்குரிய பணிமகளிரும் ஒப்பனை செய்து கொள்ளுதலோடே, அவர்கள் மகிழ்ந்து
ஊர்ந்து செல்லுதற்குரியவாய, புழைக்கைய இளம்பிடி புகுந்து பண்ணுக! -
தொளைபொருந்திய துதிக்கையையுடைய இளைய பெண்யானைகளையும் அவ்வியானைக்
கொட்டிலிற்புக்கு ஒப்பனை செய்க!, தழற்புகை தம் அழற் படையொடு நவின்ற கை -
நெருப்பும் புகையும் காலும் சினமிக்க தம் போர்ப்படைகள் பொருந்திய கையினராய்,
தானைவீரர் - நமது படைமறவர், புகுந்து காவல் அமைக - அம்மகளிர் மருங்கு சென்று
காவல் செய்தலில் முனைக. ஏ: அசை, (எ - று.)

     அம்மகளிரோடே செல்லும் உழைக்கல மகளிரும், அவர் ஊர்ந்து செல்லும் பிடிகளும்,
ஒப்பனை கொள்க; அம்மகளிரை, மறவர் புறம் நின்று போற்றுக; என்றான் என்க. (79)

     பயாபதி மரீசிக்கு முகமன் கூறல்
 

( 79 )

 

906.

இன்னன வுழையவர்க் கருளி யேந்துதோண்
மன்னவன் மருசியை மருளக் கட்டுரைத்
தென்னொடும் பெயர்திநும் பாடிக் கென்றொரு
பொன்னகர் மாளிகை 2புகுதன் மேயினான்.

     (இ - ள்.) இன்னன உழையவர்க்கு அருளி - இவ்வகையாக ஏவன்மாந்தர்க்குக்
கூறியபின்னர், ஏந்துதோள் மன்னவன் - ஆற்றல் தாங்கிய தோள்படைத்த அப்பயாபதி
வேந்தன், மருசியை மருள கட்டுரைத்து - மருசி என்னும் தூதன் தனது உயரிய முகமன்
உரைகளால் மனமருண்டு வியப்புறுமாறு இனியன மிகப்பேசி, என்னொடும் பெயர்தி நும் பாடிக்கு என்று - ஐய! நீ யான் சடியரசனைக் காண நும் பாடிக்குப்போகும் துணையும்
ஈண்டிருந்து என்னுடனே வருக என்று கூறி அவனோடும், ஒரு பொன்நகர் மாளிகை புகுதல்
மேயினான் - ஓர் அழகிய கோயிலின் கண் உள்ள ஒரு மாளிகையுள் சென்று புகுந்தான்,
(எ - று.)
 


     (பாடம்) 1. யிலங்க.