பக்கம் : 592
 

      “புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு
       மதிமை சாலா மருட்கை நான்கே“

என்பவாகலின் ஈண்டு மரீசியின் மருட்கைக்குப் பயாபதி வேந்தன் முகமனில் தான்கண்ட
புதுமை பெருமைகளும் தனக்கெய்திய ஆக்கமும் காரணங்களாதல் அறிக.
 

( 80 )

பயாபதி அமைச்சரை வினாதல்
907.

வேண்டுப வவன்றிறத் தருளி வேந்தர்கோ
னீண்டிய மந்திரக் கிழவர்க் கென்னையாங்
காண்டகு திறலவற் காணு மாறென
ஆண்ட1கைக் கவர்களு மறியச் செப்பினார்.

 

     (இ - ள்.) அவன் திறத்து வேண்டுப அருளி - பின்னும் அம் மரீசியெனும்
அத்தூதன் பொருட்டுச் செய்யற்பாலனவாகிய பரிசில் முதலியவற்றையும் பெரிதும் வழங்கிய
பின்னர், வேந்தர்கோன் - அம்மன்னர் மன்னன், ஈண்டிய மந்திரக்கிழவர்க்கு - ஆண்டுக்
கூடிய அமைச்சர்களை நோக்கி, யாம் காண்டகு திறலவன் காணும் ஆறு என்னை என -
யாம் சென்று காணுதற்கியன்ற தகுதியுடைய ஆற்றல் மிக்க அச்சுவலனசடி மன்னனைக்
காணுதற்குரிய வழி யாது கூறுங்கோள் என வினவ, ஆண்டகைக்கு - அவ்வணம் வினவிய
ஆண்மை மிக்க பயாபதிக்கு, அவர்களும் - அவ்வமைச்சர்களும், அறியச் செப்பினார் -
விளக்கமாக இயம்பினார், (எ - று.)

     மரீசிக்குச் செய்யும் சிறப்பெல்லாம் செய்தபின்னர், தன் அமைச்சரை நோக்கித்
திறலவற் காணும் ஆறு என்னை என, அவர்களும் செப்பினர், என்க.
 

( 81 )

அதற்கு அமைச்சர் கூறும் விடை

908.

விண்ணியல் விஞ்சையர்க் கிறைவன் வேந்தராற்
கண்ணிய பெருங்குலக் கடலுட் டோன்றினான்
நண்ணிய தொடர்ச்சியு நமிக்க 2ணண்ணுமா
லெண்3ணுவ வவன்றிறத் திறைவ வில்லையே.

     (இ - ள்.) விண் இயல் விஞ்சையர்க்கு இறைவன் - விசும்பில் இயங்கும் இயல்புடைய
விச்சாதரர்களுக்கு மன்னனாகிய சடிவேந்தன், வேந்தரால் - ஏனைய மன்னர்களால்,
கண்ணிய பெருங்குலக் கடலுள் தோன்றினான் - மதிக்கப்பட்ட ஏசாச்சிறப்பின் இசை
விளங்கு பெருங்குலம் என்னும் பாற்கடலுள் பிறந்தவன் ஆவன், நண்ணிய தொடர்ச்சியும்
நமிக்கண் நண்ணும் - மேலும் அவன் குலத்திற்கும் உன்குலத்திற்கும் பண்டே
 


     (பாடம்) 1. ஆண்டகைத் தவர்களும். 2. நன்று 3. எண்ணுப