பொருந்தியதொரு தொடர்பு நமியரசன் பால் நின்றும் தொடர்வதாயிற்று, எண்ணுவ அவன் திறத்து இல்லை இறைவ ! - ஆதலால், அச்சடிமன்னன் திறத்தில் யாம் (செய்யும் எத்தகைய சிறப்பும் அவனுக்குப் பொருந்துவதே ஆகும், எனவே அம்மன்னன் இத்தகைய சிறப்பிற்குரியன் ஆகான் என்னும்) ஆராய்ச்சி வேண்டுவதின்றாம் அரசே! (எ - று,) சடி சிறந்த அரசர் குடியிற்பிறந்தவனும் நம் பழைய உறவினனும் ஆதலால் அவனுக்கு யாம் செய்யும் எத்தகைய சிறப்பும் பொருந்துவதேயாம் ; ஆதலால் அதுபற்றி ஆராய்தல் வேண்டா என்றார் என்க. |
(இ - ள்.) குலத்தினும் குணத்தினும் கொண்ட கோலமாம் நலத்தினும் - உயர் குடிப்பிறப்பினாலாதல் உயர்குணமுடைமையினாலாதல் தான் கொண்டுள்ள அரசர் கோலத்திற்கியன்ற அறத்தினாலாதல், நின்னொடு நிகர்க்கும் நன்மையன் - சடிமன்னன் உன்னோடு முற்றும் சமனாகும் நன்மையுடையனே, மலைத்தலில் வயத்தினும் பெரியன் - மேலும் பகைவரால் வெல்லப்படாத ஆற்றலினும் மாண்புடையான், உலத்தினும் பெருகிய உருவம் தோளினான் மல்லினும் பெரியன் - திரள்கல்லை ஒத்த எழில்மிக்க தோளுடைய அச் சடிமன்னன் மற்போர் புரிதலினும் சால வன்மையுடையனே ஆவான், (பெரியன் என்பதைப் பின்னுங் கூட்டுக) (எ - று,) சடிமன்னன் குலத்தாலும் குணத்தாலும் அறத்தாலும் உன்னையே ஒப்பானவன்; ஆற்றலானும் பெரியன்; மற்போரினும் வலியன் என்க. மலைத்தலில் வயம் என்றது - அரசுறுப்புக்களுள் ஒன்றாகிய படை வலியையும், மல்லினும் பெரியன் என்றது, சடியின் உடல்வலியையும் கூறியவாறு. |