பக்கம் : 594 | | (இ - ள்.) ஆதலால் - அவ்வாறாதலால், அவன் திறத்து யாது செய்யினும் - அம்மன்னனுக்கு யாம் எத்தகைய உயரிய சிறப்பைச் செய்தாலும், ஏதம் ஆங்கில்லை - அவ்வழிக் குற்றம் ஏதும் உண்டாதலில்லை, கோல் இறைவ - செங்கோல் மன்னனே !, என்றனர் - என்று கூறினர் (அவர் எத்தகையர் எனில்), கோதிலாக்குணம் புரிகுன்று அனாற்கு குற்றமற்ற நற்குணங்களான் இயன்றதொரு மலையையே ஒத்த பயாபதி மன்னற்கு, ஒரு நீதிநூற் கடலின் நின்றனைய நீர்மையார் - ஒப்பற்றதோர் அரசநீதியென்னும் கடல் நிலைத்து நின்றிருந்ததை ஒக்கும் தன்மையுடைய அமைச்சர்கள் என்றபடி, (எ - று.) குணக் குன்றத்தை அறவாழி சூழ்ந்தது என்னும் நயம் உணர்ந்து மகிழ்க. இவ்வாற்றால் சடிமன்னன் எத்தகைய சிறப்பையும் பெறுதற்குத் தகுதியுடையோனே என்றனர் என்க. | ( 84 ) | | 911. | ஆங்கவர் 1மொழியைக் கேட்டே யறிவினுக் கரச ரென்று வாங்கிருங் கடலந் தானை மன்னவன் மகிழ்ந்து 2மற்றைப் பூங்குழை மகளிர் காக்கும் பொன்னணி வாயில் போகித் தேங்கம ழலங்கன் மார்பன் றிருநகர் முற்றஞ் சேர்ந்தான். | (இ - ள்.) ஆங்கு அவர் மொழியைக் கேட்டே - அவ்விடத்தே அவ்வமைச்சர்தம் அறிவியல் மொழியைச் செவியுற்ற, வாங்கு இருங் கடல் அந்தானை மன்னவன் - வளைந்த பெரிய கடல்போன்ற அழகிய படைகட்கு அரசனாகிய பயாபதி, அறிவினுக்கு அரசர் என்று மகிழ்ந்து - (யாம் வறிய மண்ணிற்கு மட்டும் அரசாக) நீவிரோ அறிவுலகிற்கே அரசர் ஆவீர்கள் என முகமன் கூறி (அவர் மகிழ) மகிழ்ச்சியை அடைந்து, மற்றைப் பூங்குழை மகளிர் காக்கும் பொன் அணிவாயில் போகி - அழகிய தோடுடைய மகளிர்களால் காவல் செய்யப்பட்ட அப்பொன்னால் அழகுறுத்தப்பட்ட வாயிலைக் கடந்து, தேம் கமழ் அலங்கல் மார்பன் - தேன் கமழ்மாலை அணிந்த மார்பையுடைய அம்மன்னன், திருநகர் - அரண்மனையின், முற்றம் - தலைவாயிலை, சேர்ந்தான் - எய்தினான்; (எ - று,) அறிவினுக்கு அரசர் என்றான், யான் உலகிற்கு மட்டுமே மன்னன் நீவிர் அறிவிற் கரசர் ஆதலார் நீயிரே என்னினும் பெரியீர் என்றவாறு. | ( 85 ) | | 912. | அடுகடா மாவி நாறு மழிமதங் கருவி வீழத் தொடுகடா வயிரத் தோட்டி யுடையன 3தொடர்க ளூன்ற விடுகொடா வியாள நிற்ப மெல்லவன் பணிகள செய்யும் படுகடாக் களிறுந் தேரும் புரவியும் பண்ணு கென்றான். | | |
| (பாடம்) 1. மொழியக் 2. மற்றப். 3. தொடர்கணூன்ற | | |
|
|