பக்கம் : 601 | | (இ - ள்.) கண்ணியும் - முடிமாலையும், கமழும் சூட்டும் - மணங்கமழும் கொண்டைமாலையும், கற்றையாக் கட்டப்பட்ட தண்ணிய மலரும் - கற்றையாகக் கட்டப்பட்ட குளிர்ந்த பூஞ்செண்டும், தாம மாலையும் - தொடைமாலையும், சதங்கை தம்மொடு - கிண்கிணி முதலிய சதங்கைகளோடு, எண்ணிய வண்ணமாலை - ஆராய்ந்தெடுத்த பன்னிற மணிமாலையும், எழில் நகர் எல்லையெல்லாம் - அழகிய அரண்மனை வரைப்பகம் எங்கும், விண்ணியல் விமான வீதி - விமானங்கள் இயங்கும் விசும்பளவும், வெறிகொள - மணம் கமழும்படி, மிடைவி - நிரப்புவாயாக !, வேலோய் - வேலையுடைய சித்திரதரனே !, (எ - று.) தாமமாகிய மாலை என்க. மலர்களை நிரல்பட வைத்து வளைவின்றி நீளக் கட்டித் தோளில் இடும் மாலை தாமம் என்ப. வண்ணமாலை - நவரத்தினமாலை. சூட்டு - முடியைச்சுற்றி வளையமாகச் சூட்டும் மாலை. | ( 96 ) | | 923. | குங்குமக் குழம்பு கொட்டிச் சந்தனத் தொளிகண் கூட்டி அங்கலுழ் விரையின் சேற்றோ டகநக ரளறு செய்து மங்குலாய் விசும்பு மூட வகிற்புகை மயங்க மாட்டிப் பொங்குபொற் சுண்ணம் வீசி மணவினை புனைவி யென்றான். | (இ - ள்.) அகநகர் - நமது போதன நகரத்தின் உள்ளிடத்தை, குங்குமக் குழம்பு கொட்டி - குங்குமத்தாலாய செங்குழம்பைக் கொட்டி, சந்தனத் தொளி - சந்தனச் சேற்றின்கண், கண்கூட்டி - கூட்டற்பாலவாய மணப்பொருள் பிறவும் கூட்டிக் கொட்டி, அங்கலுழ் விரையின் சேற்றோடு - அழகிதாய் நெகிழ்ச்சியுடைய கலவைச் சாந்தும் கொட்டி, அளறு செய்து - சேறாக்கி, மங்குல் ஆய் விசும்புமூட - முகில் போன்று நுண்ணிய வானம் போர்க்கும்படி, அகிற்புகை மயங்க மாட்டி - அகிலாலாய மணப்புகையைப் பொருந்த ஊட்டி, பொங்கு பொன் சுண்ணம் வீசி - மிகுந்த பொன்துகளைத் தூவி, இவ்வாற்றால், மணவினை புனைவி என்றான் - திருமணம் நிகழ்த்துதற்கு வேண்டிய செயல்களைச் செய்வித்திடுக என்றருளினான், (எ-று.) இதன்கண், போதன நகரத்தின் உள்ளே திவிட்டநம்பியின் திருமண விழாவிற்கு வேண்டியவற்றைச் செய்க, எனப் பயாபதி கட்டளையிடுதல் கூறப்படுகின்றது. | ( 97 ) | பயாபதி விசயதிவிட்டர்களையும் தன்னோடு வருக எனல் | 924. | அனையன வவனை 1யேவி யரசிளங் குமரர் தம்மைப் புனைமலர்க் கண்ணி 2சூடிப் பொன்னெழி லாரந் தாங்கி நனைகவுள் வேழ மேறி நம்மொடு வருக வென்றான் கனைகுரன் முரச மார்க்கும் கடிபடைக் கால வேலான். | | |
| (பாடம்) 1. நீ போய். 2. சூட்டி | | |
|
|