அத் தொழிலாளரை அதனைப் பண்ணுறுத்தற்கு ஏறுக என்றான் என்க. ஆடி - ஊடாடி. புரசை - யானைக் கழுத்திலிடும் கயிறு. நிகளம் - விலங்கு. நிலத்தவர் - பூமிமேல் நிற்கும் பாகர். |
( 101 ) |
|
928. | பின்னவ னேறித் தூசப் பெருவடம் பிடித்த பின்னைப் பொன்னவிர் தொடர்கண் விட்டுப் புறத்துக்காற் புரோசை கோத்து மன்னவ னருளு மாறு மங்கலக் கோலஞ் செய்வான் துன்னருங் சுவைமுட் கோலோர் சூழ்ந்துவந் தணைக வென்றான். |
(இ - ள்.) பின் அவன் ஏறி - அவர்கள் ஏறிய பின்னர்த் தான் ஏறி, தூசம் பெருவடம் பிடித்த பின்னை - தூசம் என்னும் பெரிய கயிற்றைக் கைக்கொண்ட பின்னர், பொன் அவிர் தொடர்கண் விட்டு - அழகு விரிகின்ற சங்கிலிகளைத் தாழவிட்டு, புறத்துக்கால் புரோசை கோத்து - புறங்காலில் புரோசைக் கயிற்றை மாட்டி, மன்னவன் அருளுமாறு - பயாபதி மன்னன் மனமகிழ்ந்தருளும்படி, மங்கலக் கோலம் செய்வான் - நன்மையாகிய ஒப்பனை செய்தற்பொருட்டு, துன்னரும் கவைமுள் கோலோர் - நெருங்குதற்கரிய கவைத்த இரும்புமுள் தோட்டியையும் செறித்த கோலையுமுடைய பாகர்கள், சூழ்ந்து வந்தணைக என்றான் - அரசுவாவைச் சுற்றிவந்து பொருந்துக என்று அப்பாகன் கூறினான், (எ - று.) தூசம் - கைக்கொண்டு நடத்தும் கயிறு. “வேய்முதற் றூசங் கொண்டேறினான்“ (சிந்தா - கனக - 46) என்பதனானும் அறிக. |
( 102 ) |
பாகர் தலைவன் அரசுவாவை அணி செய்தல் |
929. | கரும்பொடு முடித்த 1காய்நெற் கதிரணிக் 2கவளக் கற்றை இரும்புடை வயிரக் கோட்டி னிடையன பயிரி நீக்கிச் சுரும்பொடு மலர்கள் வாய்ந்த துகளையு மகல வாரி அரும்புடை யலங்கன் மார்ப னரத்தநீ ரெறிவித் தானே.்றான். |
(இது முதல், 4 செய்யுள்கள் ஒரு தொடர்) (இ - ள்.) கரும்பொடு முடித்த - கரும்புகளோடு சேர்த்துக் கட்டிய, காய் நெல் கதிர் அணிக்கற்றை - காய்த்த நெல்லின் கதிராலாகிய அழகிய கற்றைகளும் ஆகிய, கவளம் - யானைக்கிடு உணவாகிய கவளத்தால் உண்டாய, இரும்புடை வயிரக்கோட்டின் இடையன - பெரிய பக்கங்களின் அமைந்த வயிரப் பூண் செறித்த கோடுகளுக்கு இடைக்கணுள்ள துராலை, பயிரி - அதற்குரிய யானை மொழியைக் கூறி, நீக்கி - அகற்றித் தூய்மை செய்து, சுரும்பொடு மலர்கள் வாய்ந்த துகளையும்அகல வாரி - |
|
|
(பாடம்) 1. காய்பொற். 2. கவழ |