பக்கம் : 606
 

      பட்டத்தைச் சேர்த்தி, கற்றையம் கவரிக் கண்ணி - கற்றையாகக் கட்டப்பட்ட
அழகிய கவரிமானின் மயிராலாய சாமரைகளை, கருணமூலத்து வைத்தான் - செவியின்
அடியிலே செருகிவைத்தான், (எ - று.)

     கடிகை - ஒரு பொன்மாலை. ஓடை - நெற்றிப் பட்டம். புளகச் சூழி - கண்ணாடிப்
பட்டம். இஃது உச்சியிலிருந்து முகத்தே தொங்கவிடும் ஓரணி. மேலும் கடிகை பூட்டி.
ஓடைசேர்த்தி, புளகம் வீழ்த்து, பட்டம் சேர்த்தி, கருணமூலத்துக் கவரிக் கற்றை வைத்தான்
என்க.
 

( 105 )

 
932.

தாரணி 1தயங்கச் சாத்தித் தவிசின்மேல் விரித்து மஞ்சி
லேரணி திருவில் லேய்ப்ப விருவடம் விலங்க வீக்கிச்
சீரணி மணிகள் வீழ்த்துச் செம் 2பொன்செய் சுண்ணஞ் சிந்திக்
காரணி மின்னிற் றோன்றக் கதலிகை நடுவித் 3தானால்.
 

     (இ - ள்.) தாரணி தயங்கச் சாத்தி - பூமாலைகளாகிய அணிகளைத் திகழும்படி
சூட்டி, தவிசின் மேல் விரித்து - இருக்கையின் மேலே விரிக்கும் மரபினதாகிய துகிலை
விரித்து, மஞ்சில் ஏரணி திருவில் ஏய்ப்ப - முகிலில் அழகுசெய்கின்ற இந்திர வில்லை
ஒப்ப, இருவடம் இலங்க வீக்கி - இரண்டு பக்கங்களினும் நாலவிட்ட இரண்டு கயிறுகளைத்
திகழுமாறு கட்டி, சீர் அணிமணிகள் வீழ்த்து - சிறந்த அழகிய யானை மணிகளையும்
தூங்கவிட்டு, செம்பொன் செய் சுண்ணம் சிந்தி - செவ்விய பொன்துகளைத் தூவி, கார்அணி
மின்னிற் றோன்ற - முகிலிடத்தே அழகு செய்யும் கொடி மின்னலைப் போன்று
தோன்றும்படி, கதலிகை நடுவித்தான் - பொன் கொடியை நடும்படி செய்தான், ஆல் :
அசை, (எ - று.)

மாலைகள் அணிந்து இருக்கையின் மேல் விரிப்பினை விரித்து இருவடம் வீக்கி, யானை
மணிகள் கட்டிச் சுண்ணம் அப்பிக் கொடி நடுவித்தான் என்க மணி - ஒலிக்கும் மணி
என்க.
 

( 106 )

பயாபதி அரசுவாவில் ஏறி யமர்தல்

933.

வேழமாங் 4கணிந்த பின்னை வேந்தர்போற் றிசைப்ப வேறிச்
சூழொளி யார மின்னச் சுடர்க்குழை திருவில் வீச
ஏழையர் கவரி யேந்த வெரிகதிர் விரிவ தொத்தா
னூழிநீ ருலகங் காக்கு முழவுத்தோ ளுருவத் தாரான்.
 

      (இ - ள்.) வேழம் ஆங்கு அணிந்த பின்னை - பட்டத்தி யானை அவ்வாறு
ஒப்பனை செய்யப்பட்ட பின்னர், ஊழிநீர் உலகம் காக்கும் முழவுத் தோள் உருவத்
தாரோன் - ஊழியைச் செய்கின்ற கடல் நீராற் சூழப்பட்ட


     (பாடம்) 1. தயங்கு. 2. பொன் செய் எண்ணஞ். 3. தானே 4. கணிந்து