பக்கம் : 608 | | | 935. | அரசிறை யரசரொ டெழுதலு மதிர்தரு முரசெறி யிமிழிசை முழவொடு கழுமின திரைசெறி நெடுவரை கடைதொறு திசைதிசை கரைசெறி கடலொலி கடுகிய தெனவே. | (இ - ள்) அரசு இறை - அரசர்க்கு அரசனாகிய பயாபதி மன்னன், அரசரொடு எழுதலும் - ஏனைய மன்னர்களோடு புறப்பட்டவுடனே, கரைசெறி கடல் - கரையகத்ததாகிய பாற்கடலின், திரை - அலையின்கண், செறிநெடுவரை - இடப்பட்ட நீண்ட மந்தரமலை, கடைதொறும் - சுழன்று கடைதலைச் செய்யுந் தோறும், திசைதிசை ஒலி கடுகியது என, திசைகள்தோறும் ஒலிமிக்குப் பரவியதைப் போல, அதிர்தரும் முரசு எறி இமிழ் இசை - முழங்குதலையுடைய முரசம் ஏற்றுதலால் எழுந்த ஓசை, முழவொடு கழுமின - மத்தள வொலியோடு கலந்து, திசை திசை பரவிற்று, ஏ : அசை, (எ - று.) பயாபதி வேந்தன் சடிமன்னனை எதிர்கொள இவ்வாறு எழுந்துழி, கடல்கடைந்த பொழுது எழுந்த பேரொலி போன்று முரசம் முதலியவற்றின் பேரொலி எழுந்தது என்க. | ( 109 ) | | 936. | துளைபடு குழலிசை துடியொடு சிறுபறை கிளையொடு படலிகை கிளையொடு கிளர்தர வளையொடு வயிரிசை மருவின மழையென வளைபடு மணியர வறிவயர் வுறவே. | (இ - ள்.) துளைபடு குழல் இசை - தொளைக்கப்பட்ட வேய்ங்குழலின் இனிய இசை, கிளையொடு கிளர்தர - கிளையென்னும் செந்தமிழ்ப் பண்ணொடு பொருந்தி ஒலிக்கவும், துடியொடு சிறுபறை - துடி சிறுபறை முதலிய இசைக்கருவிகள், கிளையொடு - தோற்கருவியாகிய தம்மினத்துடனே, மருவினகிளர்தர - பொருந்தி முழங்கினவாக, படலிகை - கைத் தாளங்கள், கிளர்தர - ஒலிக்க, வளையொடு வயிரிசை மருவின கிளர்தர - சங்குகளுடனே கொம்புகளின் இசை பொருந்திமுழங்கின, வளைபடு மணி அரவு அறிவு மழையென அயர்வுற, ஏ - வளையின் அகத்ததாகிய மணிகளையுடைய பாம்புகள் இம்முழக்கம் முகில் முழக்கமோ என அறிவு மயங்கும்படி, ஏ : அசை, (எ - று,) கிளர்தர வென்பதை ஏற்றபெற்றி கூட்டுக. அவ்வழி குழல் முதலிய இன்னிசைக் கருவிகள் இயம்பின, என்பதாம் கிளை-ஒரு பண். மணியரவு-மணியையுடைய பாம்பு; பேரொலியாகலின் அரவு அறிவயர்வுற என்றார். | ( 110 ) | | |
|
|