பக்கம் : 609
 

 

937.

சொரிவன மலர்மழை சுழல்வன வெழுபுகை
இரிவன மதுகர மிருள்வன திசைமுகம்
எரிவன 1சுடர்மணி யெழுவன கதலிகை
தெரிவன வரியன தெரு2வொடு திசையே.
 

     (இ - ள்.) மலர் மழை சொரிவன - பூமழை பொழிதலாலும், எழுபுகை சுழல்வன -
அகில் முதலியவற்றால் எழீஇய புகைப்படலங்கள் சுழல்தலாலும், இரிவன மதுகரம் -
வண்டுகள் பறந்து திரிதலாலும், திசைமுகம் இருள்வன - திசைகள் இருளடைந்தன, எரிவன
சுடர்மணி கதலிகை எழுவன - சுடர் விடுவனவாகிய மணிகளால் ஒப்பனை செய்யப்பட்ட
கொடிகள் எழுவனவற்றால், தெரிவன அரியன திசை - திசைகள் அறிந்து கொள்ளுதற்
கியலாதன ஆய்விட்டன, (எ - று.)

     மலர் மழையானும் புகையானும் வண்டுகளானும் திசை இருண்டன. கொடியால்
திசைதெரிய அரியன ஆயின என்க.
 

( 111 )
 
938.

கொடியொடு 3குடையிடை மிடைவன விருள்செய
முடியொடு சுடர்குழை முளைவெயி லொளிசெய
வடியொடு புனைகழ லரசிறை படையெழ
இடையிடை யிரவொடு 4பகலிசை வனவே.
 

     (இ - ள்.) அடியொடு புனைகழல் அரசுஇறை படையெழ - திருவடிகளோடு
யாக்கப்பட்ட வீரக்கழல்களை யுடைய மன்னர் மன்னனாகிய பயாபதியின் படைகள் திரண்டு
எழுதலாலே, கொடியொடு குடை இடை மிடைவன இருள்செய - கொடிகளோடு குடைகள்
இடையீடின்றி நெருங்கி இருளைச்செய்தலாலும், முடியொடு சுடர்குழை வெயில்
ஒளிமுளைசெய - முடியும் சுடர்தரு குண்டலமாதிய அணிகலன்களும் வெயிலாகிய ஒளியைத்
தோன்றச் செய்தலாலும், இடைஇடை இரவொடு பகல் இசைவு அன - ஆங்காங்கே
வெவ்வேறு வெவ்வேறு செவ்வியில் நிகழற்பாலனவாகிய இராப்போதும் பகற்போதும் ஒரே
செவ்வியில் வந்து பொருந்துவதையும் ஒத்தன, ஏ : அசை, (எ - று.)

     கொடி முதலியன செறிந்து இருள்செய்ய, முடி முதலியன மிளிர்ந்து ஒளிசெய்ய, அங்கு
இரவும் பகலும் ஒரே சமயத்தில் உளவாயின என்க.
 

( 112 )
 
939.

புரவிய 5குரமுக மிடுதொறு பொடியெழு
மருவிகொண் மதமழை பொழிதொறு மளறெழு

    

 

     (பாடம்) 1. சுடரணி. 2. தெருவொடு விசையே. 3. குடைமிடை 4. பகலிசை யெனவே. 5. குரைமுகமிடு