பக்கம் : 610 | | | | மருவிய 1மனிதரு மனநனி யயர்வுறு தெருவுகள் படுவது சிலரிடை தெரிவார். | (இ - ள்.) புரவிய குரமுகம் - குதிரைகளின் குளம்புகளின் நுனி, இடுதொறும் - மிதித்திடுந்தோறும், பொடியெழும் - நிலத்தில் துகள்கள் எழாநிற்கும், அருவிகொள் மதமழை பொழிதொறும் - யாானைகள் அருவிகொண்டோடும்படி மதநீராகிய மழையைப் பொழியும் தோறும், துகளாய நிலம், அளறெழும் - சேறாம், (இவ்வாற்றால் அவ்வழி) மருவிய மனிதரும் மனம் நனி அயர்வுறு தெருவுகள் - சென்ற மனிதர்கள் மனம் மிகவும் வருந்துதற்குக் காரணமான அத்தெருக்கள், படுவது சிலர் இடை தெரிவார் - படும்பாட்டை ஒரு சிலரே, காண்பாராயினர், (எ - று.) தெருக்கள் அங்ஙனமாதலைப் படையின் ஊடே சென்று பார்க்கவும் அரிதென்பார் தெருபடும்பாட்டைச் சிலரே தெரிவார் என்றார். புரவிகளாற் றுகளெழுந்தும் யானை மதத்தாற் சேறுபட்டும் தெரு படும்பாடு கூட்டமிகுதியாற் றெரிவரியதாம் என்க. | ( 113 ) | | 940. | செருவியல் களிறுகள் செவிபுடை யரவமு முருவிய லிவுளிக ளொலிகலி யரவமும் கருவிகொள் வயவர்கள் கழனர லரவமும் விரவிய செவிபிற விளி2கொள் லிலவே. | (இ - ள்.) செருவியல் களிறுகள் - போர் செய்யும் இயல்பினவாகிய யானைகள், செவிபுடை அரவமும் - செவிகளால் அடித்தெழுப்பும் ஒலியும், உருவியல் இவுளிகள் - நல்லிலக்கணம் அமைந்த புரவிகளின், ஒலி கலி அரவமும் - வீரக்கழல்கள் எடுக்கின்ற ஓசையும், விரவிய செவி - விரவப் பெற்ற செவிகள், பிற விளி கொளல் இல - வேறு ஒலிகளை ஏற்றுக் கொள்ளுதல் இலவாயின, ஏ : அசை, (எ - று.) பிறவிளி, இவற்றின் வேறாகிய தம்மயலார் விளிக்கும் ஓசை யெனினும் ஆம். களிறுகள் செவிபுடைக்கும் ஒலியும், புரவிகள் அணிகல ஒலியும் மறவர் கழல் ஒலியும் விரவி மிகுதலால் வேறு சிற்றொலிகளைச் செவிகள் ஏற்கில என்க. | ( 114 ) | | 941. | வளையவர் மனநிறை யழிதரு வடிவுடை இளையவ ரிருபுற வுரைகளி னிடையிடை | | |
| (பாடம்) 1. மனிசரு 2. கொளவிலவே. | | |
|
|