பக்கம் : 612
 

சடிமன்னன் பயாபதியை எதிர்கொள எழுதல்

943.

1சுரமைய ரதிபதி வருவது மருசியி
னருமைகொள் 2புகழவ 3னறிதலி னெதிர்கொள
வரமிகு நெடுவரை மணிமுடி நெடியவ
னுரமிகு 4புடையெழ வுரைநனி யரிதே.
 

     (இ - ள்.) சுரமையர் அதிபதி - சுரமைநாட்டைப் புரக்கும் பயாபதி வேந்தன்,
வருவது - தன்னைக் காண வருகின்ற செய்தியை, மருசியின் - மரீசியென்னும் தூதனால்,
அருமைகொள் புகழவன் - வேறு பிறர் பெறற்கரிய சிறந்த புகழையுடைய சுவலனசடி
வேந்தன், அறிதலி்ன் - அறிந்துகொண்டதனாலே, எதிர்கொள - அப்பயாபதியை
எதிர்கொள்ளும் பொருட்டு, வரம் மிகு நெடுவரை - வரந்தரும் கடவுட்டன்மை மிக்க நெடிய
இமயமலையை உடைய, மணிமுடி நெடியவன் - மணிகளாலியன்ற முடியுடைய
சடிமன்னனுடைய, உரம் மிகு படைஎழ - ஆற்றல் மிக்க நால்வகைப் படைகளும்
எழுந்தனவாக, உரைநனி அரிதே - அப்படையெழுச்சியினைக் கூறுதற்குச் சொற்கள்
கிடைத்தல் மிகவும் அரிதாகும், (அப்படையெழுச்சியின் பெருமையை உரைக்கவியலாது
என்றபடி,) (எ - று.)
     மருசியின் - மருசியினால். பயாபதி மன்னன் தன்னை எதிர்கொள வரும் செய்தியை
மரீசியினால் உணர்ந்த சடி தன் பகுதிகளோடே அப்பயாபதிக்கு எதிர்செல எழுந்த
பெற்றியைக் கூறச் சொற்கள் அரியன என்க.
 

( 117 )
 
944.

கருவரை வருவன வெனவுள களிறுகள்
பெருவரை யருவிக ளெனவுள பெயர்கொடி
அருவரை யடுபுலி யெனவுள ரிளையவர்
பருவரை 5யிறைபுடை யெழுவதோர் 66படையே.
 

     (இ - ள்.) களிறுகள் - யானைகள், கருவரை வருவன எனவுள - கரியமலைகள்
புடைபெயர்ந்து வருவனபோன்றிருந்தன, பெயர் கொடி - இயக்கமுடைய கொடிகள்,
பெருவரை அருவிகள் எனஉள - பெரிய மலைகளில் அருவிகளை ஒத்திருந்தன, இளையவர்
இளமையுடைய போர் மறவர்கள், அருவரை அடுபுலி எனஉளர் - ஏறற்கரிய மலைகளில்
உறையும் புலிகளை ஒத்திருந்தனர் பருவரை இறை - பரிய இமயமலையின் அரசனான
சடியின், புடையெழுவதொர் படை - பக்கத்தே எழுந்த படையின் தன்மை இத்தன்மைத்து,
ஏ : அசை, (எ - று.)

 

     (பாடம்) 1. சுரமியரதிபதி வருமென மருசிசென். 2. புகழற். 3. கறைதலி.
4. படையெழ. 5. யிறைபடை. 5. படியே.