பக்கம் : 613 | | யானைகள் மலைகளை ஒத்தன, கொடிகள் அம்மலையருவியை ஒத்தன. மறவர்கள் அம்மலையிடை உறையும் புலியை ஒத்தனர், என்க. | ( 118 ) | | 945. | நிலமிசை யவர்படை நிலநெளி வுறவரு மலைமிசை யவர்படை மலைநெரி வுறவரு மலைதிரை யொலிகட லவைபுடை பெயர்தரு நிலைபெரி 1தரிதிப நெடுவரை நிரையே. | (இ - ள்.) நிலமிசை அவர் படை - மண்ணவராகிய பயாபதி முதலியோர் படை, நிலம் நெளிவுற வரும் - தாம் வாழுதற்கிடமான நிலம் நெளியும்படி வாராநிற்கும், மலைமிசையவர் படை - சடி முதலியோர், படை, மலைநெரிவு உறவரும் - தாம் வாழ்தற்கிடமான மலைகள் நெரியும்படி வாராநிற்கும், அவை - அவ்விருவேறு படைகளும், புடை பெயர்தரும் அலைதரும் ஒலி கடல் - தத்தமிடத்தினின்றும் புடைபெயர்ந்து செல்லும் இரு வேறு கடல்களையே ஒக்கும் ஆதலால்; இபம் நெடுவரைநிரை - இனித் திசை யானைகளும் திக்குமலைகளும் ஆகிய வரிசைகள், நிலை பெரிது அரிது - தத்தமிடங்களிலே நிலைத்து நிற்றல் மிகவும் அருமையே போலும், (எ - று.) இபம் - திக்கியானை. வரை - திக்குமலைகள். அவை பெயர்தரும் கடல் போன்றன என உவமச்சொல் வருவித்துக்கொள்க. பயாபதி படை பூமி நெளியும்படி வந்தன: சடியின் படை மலைகள் நெரிவுற இயங்கின. ஆதலின், திசையானைகளும் திசைமலைகளும் நிலையுறல் அரிதாயிற்றென்க. | ( 119 ) | | 946. | முகிலிடை 2புகுமுறை புரவிக 3ளெனினவை முகிலிடை புகுவதொர் முறைமையை யுடையன வகிலிடு நுழை4புகை யவைகமழ் வனவெனி னகிலிடு நுழைபுகை யவர்புக ழதுவே. | (இ - ள்.) புரவிகள் - சடிமன்னன் படைக்கண் உள்ள புரவிகள், முகிலிடை புகும்முறை எனின் - விஞ்சைப்புரவிகள் ஆதலின் விண்படர்ந்து மேகங்களினும் புகுவதோர் முறைமையையுடையன என்றால், அவை - அப்பயாபதி வேந்தனின் புரவிகள் தாமும், அகில இடுநுழை புகைமுகிலிடை புகுவதொர் முறைமையை உடையன - அகிற்கட்டையையிட்டு எழீஇய நுழைந்து செல்லுதற்கியன்றவாறு செறிந்த மணப் புகையாகிய மேகபடலங்களினூடே புகுந்து செல்லுமொரு முறைமையுடையனவாகவே இருந்தன, அவை - அப்புகை முகில்; கமழ்வனஎனின் - மணமுடையனவாலோ எனின், அகில் இடுநுழை புகைஅது அவர்புகழ் - அகிற்புகை முகில் மணமுடையது ஆதல்மேலும் அப்பயாபதியின் படையாளர்க்குப் புகழ் தரும் தன்மைத்தே அன்றோ, ஏ : அசை, (எ - று.) | |
| (பாடம்) 1. தரிதிவணெடு. 2. புகுவன. 3. ளெனினிவை 4. புகைகமழ் தருவன வெனி. | | |
|
|