பக்கம் : 615
 

      அலர் - பூ - ஆகலின் பரியாயத்தால் பூமியை அலர் என்றார். அடி - கீழ்.
பூமியின்கண் அடியிட - கீழிடம் இல்லையாயிற்று, என்க. மலையரையனாகிய சடிமன்னன்
தமர்களை நிலத்தே செல்லுக எனக் கட்டளையிட்டபடியே, அவர் நிலத்திடை
இறங்கியபோது, அவர் அடியிட்டிறங்க நிலமிடமிலதாயிற் றென்க.
 

( 122 )

 
949.

சங்குபோ லொளியவன் றாதை தன்படை
கங்கைபோற் படர்ந்தது கலக்குங் காதலா
லிங்குநீர் யமுனையி னிழிவ தொத்தது
மங்குல்சேர் மணிவரை மன்னன் றானையே.
 

     (இ - ள்.) சங்குபோல் ஒளியவன் தாதைதன் படை - சங்கினது நிறத்தை ஒத்த
நிறமுடைய விசயன் தந்தையாகிய பயாபதியின் பெரும்படை, கங்ைகைபோற் படர்ந்தது
- கங்கையாறு செல்வது போன்று சென்றது, மங்குல்சேர் மணிவரை மன்னன் தானை -
முகில்தவழும் அழகிய இமயமலைக்கு அரசனாகிய சடியின் பெரும்படை, கலக்குங்காதலால் -
அக்கங்கை யாற்றினோடு கலக்கும் ஒரு விருப்பத்தாலே, இங்கு - இவ்விடத்தே, யமுனையின்
நீர் இழிவது ஒத்தது - யமுனையாற்றின் வெள்ளம் விரைந்து செல்லுதலை ஒத்துச் சென்றது,
(எ - று.)

     பயாபதியின்படை கங்கையாற்றைப் போன்று படர்ந்தது; சடியின் படை அவ்வியாற்றிற்
கலக்கும் யமுனைபோல விரைந்ததென்க.
 

( 123 )

 

950.

மாவியல் கடற்படை மயங்கி வானிடைப்
பூவிய 1லிணரொடு கவரி பொங்கலாற்
பாவிய பனித்திரைப் 2பரவை பாற்கடன்
மேவிய விசும்பிடை விரிந்த தொத்ததே.
 

      (இ - ள்.) மாஇயல் கடற்படை மயங்கி - யானை குதிரைகளாகிய விலங்குகளியங்கா
நின்ற கடல்போன்ற இரண்டு பெரிய படைகள் பொருந்தியபொழுது, பூவியல் இணரொடு -
வெள்ளிய பூக்கள் பொருந்திய கொத்துக்களோடே, கவரி வானிடை பொங்கலால் -
வெண்சாமரைகளும் மிக்கு வெளியிடத்தே அசைதலால், பாவிய பனி திரை - விரிந்த
தட்பமுடைய அலைகளோடு கூடிய, பரவைப் பாற்கடல் - அகன்ற திருப்பாற்கடல், மேவிய
விசும்பிடை - பொருந்திய விண்ணில், விரிந்தது ஒத்ததே - பரவியதை ஒத்துத் தோன்றிற்று,
(எ - று.)


     (பாடம்) 1. ரிணரொடு. 2. பரவைப் பாற்கடன்