பக்கம் : 616 | | பாற்கடலோடுவமித்தலால் பூவும் கவரியும் வெண்மையுடையன என்று கொள்க. இருபடைகளும் கலந்த விடத்தே கவரிகள் நெருங்கி அசைதலால், திருப்பாற்கடல் விண்ணிற் படர்ந்தாற் போன்று தோன்றிற் றென்க. | ( 124 ) | | 951. | கழுமிய முகிலொடு களிறு கான்மிடைந் தொழுகிய வருவிநீ ருகுக்கு மாதலான் மழைமுகின் 1மழகளி றென்னும் வேற்றுமை உழையவ ருழையவர்க் குணர்த்தல் வேண்டுமே. | (இ - ள்.) கழுமிய முகிலொடு களிறுகால்மிடைந்து - விண்ணின்கண் செறிந்த மேகங்களோடு யானைகள் நெருங்கி, ஒழுகிய அருவிநீர் உகுக்கும் - ஒழுகும் இயல்பிற்றாய அருவியைப் போல மிக்க மதநீரைப் பொழியா நிற்கும், ஆதலால் - அங்ஙனம் ஆதலால், மழைமுகில் மழகளிறு என்னும் வேற்றுமை - அங்கு நீர் பொழிந்தது முகிலோ அல்லது யானைகளோ என்ற ஐயம் அகல்தற்குரிய வேற்றுமையை, உழையவர்க்கு உழையவர் உணர்த்தல் வேண்டும் - ஆண்டு பக்கத்தே நிற்போர் ஒருவர்க்கொருவர் உண்மையுணர்ந்து அறிவிக்கும் ஒரு பெற்றித்தா யிருந்தது, (எ - று.) மழை முகிலும் சடியின் மதயானையும் நெருங்கி மழைத்துளியையும் மதத்தையும் பொழிந்ததனால், பொழிவது மழையோ மதநீரோ என அறிதல் இயலாதாயிற்றென்க. | ( 125 ) | | 952. | புண்ணிய மணிநிரை பரந்து பூவுதிர்ந் தெண்ணியல் கொடிமிடைந் திருண்டு பாங்கெலாம் கண்ணியல் கவரிமாக் கலந்து கானக மண்ணியல் பரவையாய் வருவ தொக்குமே. | (இ - ள்.) புண்ணியம் மணிநிரை பரந்து - முற்பிறப்புக்களிலே அறம் செய்வார்க்குக் கிடைக்கும் இயல்பினவாகிய ஒன்பதுவகை மணிகளும் பரவிக் கிடப்பவும், பூவுதிர்ந்து - மலர்கள் உதிரவும், எண்இயல் கொடிமிடைந்து - ஆராய்தற்கேற்ற பல்வேறு கொடிகள் நெருங்கவும், இருண்டு - இருள் உண்டாகவும், கண்இயல் கவரிமா பாங்கெலாம் கலந்து - பக்கமெங்கும் கண்ணழகுடைய கவரியும் விலங்குகளும் உடைத்தாய், கானகம் - பெருங்காடு, மண்ணியல் பரவையாய் - மண்மேல் படர்ந்துவரும் ஒரு பரப்பையுடையதாய், வருவது ஒக்கும் - இயங்குவதை ஒத்திருக்கும் அப்படை எழுச்சி, (எ - று.) | |
| (பாடம்) 1. மறை களி. | | |
|
|