(இ - ள்.) ஏர் அணங்கு - அழகிலே திருமகளையொத்த; இளம் பெருந்தேவி - இளைய கோப்பெருந் தேவியாகிய சசி; நாள்உற - கருக் கொண்டு உயிர்க்கும் நாள்வந்தெய்த அவள் வயிற்றில்; சீர் அணங்கு அவிர் ஒளித் திவிட்டன் தோன்றினான். சிறந்த தெய்வத் தன்மைபொருந்தி விளங்குகிற ஒளியையுடைய திவிட்டன் என்பவன் பிறந்தான்; அப்பொழுது, நீர் அணங்கு - நீரால் அலைக்கப்படும்; ஒளிவளை - ஒளிமிக்க சங்குகள்; நிரந்துவிம்மின - மிகுந்து முழங்கின; அமரர் - தேவர்கள்; அணங்குஆர் அலர் மழை - அழகுபொருந்திய பூமாரி; சிந்தினார் - பொழிந்தார்கள். (எ-று.) காலம் நிறைந்தபோது சசியின் வயிற்றில் திவிட்டன் தோன்றினான். அப்போது சங்குகள் முழங்கின; தேவர்கள் மலர்மாரி பொழிந்தார்கள். அணங்கு; முதலடியில் சிறந்த தெய்வப்பெண்; இரண்டாம் அடியில் தெய்வத்தன்மை; விசயனைச் சசியின் மகனாகவும் திவிட்டனை மிகாவதியின் மகனாகவும் ஸ்ரீபுராணம் கூறும். நாள் - கருவுயிர்க்கு நாள் - தேவி வயிற்றில் நன்னாளுறத் திவிட்டன் தோன்றினான் என ஒருசொல் வருவித்து முடிப்பினுமாம். |