பக்கம் : 620 | | பயாபதி மன்னனும், சடிமன்னனும், சோதிட நூல் வல்லோர் உரைத்த நல்ல முழுத்தத்தில் ஒருவரை ஒருவர் கண்டனர் என்க. | (132) | | 959. | அம்மல ரலங்கலான் றடக்கை யென்னுமம் மொய்மலர்த் தாமரை முகிழ்க்கு மெல்லையுண் மைம்மலர் நெடுவரை மன்னன் மற்றவன் 1செம்மல ரங்கையிற் செறியப் புல்லினான். | (இ - ள்.) அம்மலர் அலங்கலான் - அழகிய மலராலாய மாலையணிந்த பயாபதி வேந்தனுடைய, தடக்கை என்னும் - பெரிய கைகள் என்று சொல்லப்படுகின்ற, அம்மொய் மலர்த்தாமரை - அந்த இதழ்கள் செறிந்த தாமரை மலர்கள், முகிழ்க்கும் எல்லையுள் - குவிகின்ற பொழுதினுள், மைமலர் நெடுவரை மன்னன் - முகில்கள் விரிதற்கு ஏதுவான நெடிய மலையின் வேந்தனாகிய சடியரசன், மற்றவன் - அப்பயாபதி, செம்மலர் அங்கையில் செறிய - தனது செந்தாமரை மலர்போன்ற அழகிய கைகளின் அகத்தே பொருந்துமாறு, புல்லினான்-தழீஇக் கொண்டான், (எ-று.) பயாபதி வேந்தன் தன் கைகளைக் குவித்து வணங்கத் தொடங்கினா னாகச் சடிமன்னன் அம்மன்னனைத் தன் மார்போடு பொருந்த அணைத்துப் புல்லினான் என்க. | ( 133 ) | | 960. | வலம்புரி வண்ணனு மகர மால்கட னலம்புரி 2நல்லொளி நம்பி தானுமவ் வுலம்புரி தோளினா னொனிகொள் பைங்கழற் கலம்புரி தடக்கையாற் கதழக் கூப்பினார். | (இ - ள்.) வலம்புரி வண்ணனும் - வலம்புரிச்சங்கினை ஒத்த நிறமுடைய விசயனும், மகரமால்கடல் நலம்புரி நல்லொளி நம்பிதானும் - மகரமீனையுடைய கரிய கடல்போன்ற நல்ல நீலவண்ணத்தையுடையவனும் நன்மையையே விழைகின்றவனும் ஆகிய திவிட்ட நம்பியும், அவ்வுலம்புரி தோளினான் - அந்தத் திரள்கல்லை ஒத்த தோள்களையுடைய சடிமன்னனது, ஒளிகொள் பைங்கழல் - ஒளியுடைய புதிய வீரக்கழல் அணிந்த திருவடிகளை, கலம்புரி தடக்கையால் - அணிகலன்களும் விரும்புதற்குக் காரணமான வலிய கைகளை, கதழ - விரைந்து, கூப்பினார் - குவித்துத்தொழுதார்கள், (எ - று.) விசயனும், திவிட்டநம்பியும், சடிமன்னனைக் காண்டலும் தம் கைமலர் குவித்துத் தொழுதனர், என்க. | ( 134 ) |
| (பாடம்) 1. செம்மலா லங்கையிற். 2. நிழலொளி. | | |
|
|