பக்கம் : 622
 

சடிமன்னன் மகனாகிய அருக்ககீர்த்தி என்பான் பயாபதியின் திருவடிகளை வணங்கினான்
என்க.
 

(136)

 

963.

ஆங்கவ னழகுகண் பருக மற்றவன்
றாங்கெழு வனையதோ டழுவித் தன்னொடு
மோங்கிய மழகளிற் 1றும்ப ரேற்றினான்
வீங்கிய கனைகழல் வேந்தர் வேந்தனே.
 

     (இ - ள்.) வீங்கிய கனைகழல் வேந்தர் வேந்தனே - மிக்க ஆரவாரத்தையுடைய
வீரக்கழல் அணிந்த மன்னர் மன்னனாகிய பயாபதிவேந்தன், ஆங்கு அவன் அழகு கண்
பருக - அவ்விடத்தே அவ்வருக்க கீர்த்தியி்ன் பேரழகைத் தன்னுடைய கண்கள் பருகா
நிற்பவும், மற்றவன் - அவ்வருக்க கீர்த்தியினுடைய, தாங்குஎழு அனைய தோள் தழுவி -
சுமையைத் தாங்குமியல்புடைய தூண்களை ஒத்த தோள்களைத் தழுவிக்கொண்டு,
தன்னொடும் - தன்னுடனே, ஓங்கிய மழகளிற்று உம்பர் ஏற்றினான் - உயர்ந்த
இளமையுடைய அரசுவாவின் எருத்தின் மேல் வீற்றிருக்குமாறு ஏற்றிக்கொண்டான், (எ - று.)

அவ்வாறு வணங்கிய அருக்ககீர்த்தியின் அழகினைப் பருகுவான் போலப் பார்த்துப் பயாபதி
வேந்தன், அவனைத் தன்னோடு அரசுவாவின் எருத்தத்தே ஏற்றிக் கொண்டான்; என்க.
 

( 137 )

 

964.

மன்னிய விஞ்சை வேந்தன் றம்பியு மருகன் றானுந்
துன்னிய சுரமை நாடன் றொடுகழ றொழுத லோடும்
பின்னிய ககதல் வெள்ளம் பெருகிய விரிவிற் றாகிப்
பொன்னியல் 2கழலி னார்க்கோர் பொங்கொளி புணர்ந்த தன்றே.
 

     (இ - ள்.) மன்னிய விஞ்சை வேந்தன் தம்பியும் - நிலைபேறுடைய சடிமன்னனுடைய
தம்பியாகிய சுவனலதரனும், மருகன்றானும் - மருகனாகிய வியாக்கிரரதனும், துன்னிய சுரமை
நாடன் - நெருங்கிய சுரமை நாட்டரசனாகிய பயாபதி மன்னனுடைய, தொடுகழல்
தொழுதலோடும் - வீரக்ழல்கட்டிய அடிகளை வணங்கியவுடன், பின்னிய காதல் வெள்ளம்
பெருகிய விரிவிற்றாகி - பிணைந்த அன்பாகிய வெள்ளம் மேலும் பெருகி விரிந்தவாற்றால்,
பொன் இயல் கழலினார்க்கு ஓர் பொங்கு ஒளிபுணர்ந்தது அன்றே - பொன்னாலியன்ற
வீரக்கழல் அணிந்தவராகிய அவர்கட்கு, ஒப்பற்ற புதிய ஒளி மிகுந்து பொருந்துவதாயிற்று,
அன்று, ஏ : அசைகள், (எ - று.)

 

     (பாடம்) 1. றெழுத்த மேறினான், றெருத்த மேற்றினான். 2. கழலி னாற்கோர்.