கண்ணே புக்குக் கலந்ததே போன்று, ஏந்திய காதல்கூர - இருபகுதியாரும் வேற்றுமை தோன்றாவாறு மிக்க அன்பாலே கேண்மைகொண்டு, பெயர்ந்து எழில் நகல் புக்கார் - அவ்விடத்தினின்றும் புறப்பட்டு அழகிய நகரத்திற் புகுந்தனர், (அவர் யாரெனில்) காந்திய கனகபயைம்பூண் கருவரை அனையதோளார் - சுடருகின்ற பொன்னாலாய பசிய அணிகலன்களையுடைய கரிய மலை போன்ற சடிமன்னனும் பயாபதியும், (எ - று.) பரவை நன்னீர்ப் பாற்கடல் - விரிவுடைய நல்ல நீர்மை பொருந்திய பாற்கடல் எனக்கொண்டு அப்பாற்கடல் பரந்ததேபோல் எழினகர் பெயர்ந்து புக்கார் என முடிப்பதும் ஒன்று. |
(இ - ள்.) எழில்கொள்கந்து அனைய திண்தோள் இளையரோடு - அழகு மிக்க தூணையொத்த திண்ணிய தோள்களையுடைய விசயதிவிட்டர் முதலிய இளைஞர்களுடனே, அரசர் ஈண்டி - மன்னர்கள் சேர்ந்து, பொழிலகம் தழீஇய சோலைப் பொன்னகர்க் கோயில்புக்கு - பூம்பொழிலின் ஊடே ஒருபுடை பற்றிய திருநிலையகம் என்னும் சோலைக்கண்ணதாகிய அழகிய பொன்னாலியன்ற நகராகிய அரண்மனையிலே புகுந்து, தழுமலர்க்கோதை நல்லார் இசை ததும்பப் பலாண்டு வாழ்த்த - பிணைந்த மலர்மாலை புனைந்த மகளிர்கள் இனிய இசை பெருகி ஒழுகும்படி பல்லாண்டு பாடி வாழ்த்தெடுப்ப, செழுமலர்த் திரள்கள் தாழும் - செழிப்புடைய மலர்க்குழாங்கள் சிதராநின்ற, சித்திரகூடம் சேர்ந்தார் - சித்திரகூடத்தை எய்தினர், (எ - று.) சித்திரகூடம் சடிமன்னன் பொருட்டு இயற்றப்பட்டது முன்னர்க் கூறப்பட்டது. |