பக்கம் : 628
 

அருக்க கீர்த்தியுடன் விசய திவிட்டர்கள் நகர்க்குச் செல்லல்

973.

அன்னண மரசர் பேசி யிருந்தபின் னருக்க னோடும்
பொன்னணி புரிசை வேலிப் புதுநகர் புகுக வென்று
மன்னவ குமரர் தம்மை மணிவரை யரைச னேவப்
பின்னவர் வேழ மேறிப் பெயர்ந்தனர் போது கின்றார்.
 

     (இ - ள்.) அன்னணம் அரசர் பேசியிருந்தபின் - அவ்வாறு சடி, பயாபதி வேந்தர்கள்தம்முள் அளவளாய்ப் பேசியிருந்த பின்னர், மணிவரையரசன் - அழகிய மலையரசனாகிய
சடிமன்னன், மன்னவ குமரர்தம்மை - அரசமக்களாகிய விசயதிவிட்டர்களை நீவிர்,
அருக்கனோடும் - அருக்க கீர்த்தியோடு, பொன்னணி புரிசைவேலிப் புதுநகர் புகுக என்று -
பொன்னால் அழகு செய்யப்பட்ட மதில்களை வேலியாகவுடைய - புத்தழகு மாறாத போதன
நகரத்தே செல்வீராக என்று, ஏவ - ஏவுதலாலே, பின் அவர் வேழம் ஏறிப் பெயர்ந்தனர்
போதுகின்றார் - பின்னர் அம்மூவரும் யானைகளிலே ஏறிச்செல்வாராயினர், (எ - று.)

     அவ்வாறு சடிமன்னனும் பயாபதி மன்னனும் அளவளாவிய பின்னர்ச் சடிமன்னன்,
விசயதிவிட்டர்களை அருக்ககீர்த்தியோடே நகர்க்குப் போக எனலும் அம்மூவரும்
யானையேறிப் போகா நின்றனர், என்க.
 

( 147 )

 

974.

ஆயிடை யரச சீய மனையவர் பெயரும் போழ்தின்
வேயுடை யருவிச் சாரல் வெள்ளிவேய் விலங்கு நாடன்
தீயுடை யிலங்கு வேலான் றிருமக ளமிர்தின் சாயல்
வீயுடை 1யலங்கன் 2ஞான்ற மிடைமணி விமானஞ் சேர்ந்தாள்.
 

     (இ - ள்.) ஆயிடை - அப்பொழுது, அரசசீயம் அனையவர் - அரசசிங்கங்களை ஒத்த
அம்மூவரும், பெயரும் போழ்தின் - செல்லும்பொழுது, வேயுடை அருவிச்சாரல் - மூங்கிற்காடுகளையுடைய அருவிபாயும் தாழ்வரை பொருந்திய, வெள்ளிவேய் விலங்கல் நாடன் -
வெள்ளியால் மூடப்பட்டாற்போன்று விளங்குகின்ற இமயமலைக் கண்ணவாகிய நாடுகளுக்கு
அரசனும், தீயுடைய இலங்குவேலான் - தீக்கான்று ஒளிரும் வேலுடையானும் ஆகிய
சடிமன்னனின், திருமகள் - செல்வமகளும், அமிர்து - பெறற்கரிய அமிழ்தத்தை ஒத்தவளும்,
இன் சாயல் - இனிய தோற்றத்தையுடையவளும் ஆகிய சுயம்பிரபை, வீ உடை அலங்கல்
ஞான்ற மணிமிடை விமானஞ் சேர்ந்தாள் -

 

     (பாடம்) 1. யலங்க. 2. ஞான்ற.