பக்கம் : 631
 

 

 

கன்னவில் வயிரத் தோளான் கருமுகி லுருவக் காளை
யின்னவ னென்ன லோடு மிலங்கொளி முறுவல் கொண்டாள்.
 

     (இ - ள்.) முன்னவன் நம்பி - சுயம்பிரபாய்! ஈண்டுச்செல்வாருள் வைத்து
முன்னர்ச்செல்லும் நம்பி, வெய்யவன் பெயரவன் - அருக்ககீர்த்தி ஆவன் (என்பது நீ
அறிதியன்றே), முழவுத் தோளான் பின்னவன் - மத்தளம் போன்ற தோள்களையுடைய அவ்
அருக்ககீர்த்தியின் பின்னர்ச் செல்பவன், சுரமைவேந்தன் பெருமகன் பயாபதி மன்னனின்
முதல் மகனாகிய விசயன் என்பவன் ஆவான், இன்னவன் - இறுதியிற் செல்லும் இவன்
யாரென்னில், அவற்குத் தம்பி - அவ்விசயனுக்குத் தம்பியும், கல்நவில் வயிரத்தோளான் -
கல்லையொத்த உறுதியுடைய தோள்களையுடையவனும், கருமுகில் உருவக்காளை - கரிய
மேகம் போன்ற நிறமுடையவனும் ஆகிய திவிட்டன் ஆவான், என்னலோடும் - என்று
அமிர்தபிரபை இயம்பியவுடனே, இலங்கொளி முறுவல்கொண்டாள் - சுயம்பிரபை
விளங்குகின்ற ஒளியையுடைய புன்முறுவல் பூத்தனள், (எ - று.)

அருக்ககீர்த்தியைச் சுட்டிப் பின்னர் விசயனையும் சுருங்கக் கூறித் திவிட்டனை மட்டும்
விளக்கமாகக் கூறுதல் காண்க. பெருமகன் - மூத்தமகன்.
 

( 152 )

சுயம்பிரபை திவிட்டன்பாற் செல்லும்
கண்களைத் தடைசெய்ய லாற்றாது மயங்குதல்

979.

நீலமா மணிக்குன் றேய்ப்ப நிழலெழுந் திலங்கு மேனிக்
கோலவா 1யரச காளை குங்குமக் குவவுத் தோளான்
மேலவா நெடுங்2க ணோட மீட்டவை விலக்க மாட்டாள்
மாலைவாய் குழலி சால மம்மர்கொண் மனத்த ளானாள்.
 

     (இ - ள்.) நீலமாமணிக் குன்று ஏய்ப்ப - மரகதமணி மலையைப்போன்று, நிழல்
எழுந்து இலங்கும் மேனி - ஒளிவிரிந்து திகழும் நீலமேனியையுடையவனும், கோலவாய்
அரசகாளை - அழகிய திருவாய்மலரினனாகிய அரசன் மகனும் ஆகிய, குங்குமம் குவவுத்
தோளான்மேல் - குங்குமம் அப்பிய திரண்ட தோளையுடைய திவிட்டன்பால், அவாம்
கெடுங்கண் ஓட - காட்சி விதுப்புற்ற தன் நெடிய கண்கள் ஓடுவனவாக, அவை மீட்டு
விலக்க மாட்டாள் - அங்ஙனம் வலிந்து ஓடும் தன் கண்களை மீட்க இயலாதவளாய்,
மாலைவாய் குழலி - மலர்மாலை பொருந்திய கூந்தலையுடைய சுயம்பிரபை,
சாலமம்மர்கொள் மனத்தள் ஆனாள் - மிகுந்த காம மயக்கமுடைய நெஞ்சுடையவளாயினள்,
(எ - று.).