(இ - ள்.) தேம்மிடை கா - தேன்செறிந்த பொழில்களையுடைய, கானல்வேலி - கடற்கரையின்கண் உள்ள, செழுமணற்குவாலும் - மிக்க மணற்குன்றுகளாதல், குன்றும் - குறிஞ்சியிலுள்ள மலைகளாதல், பூமிடை தடமும் - மருதத்துள்ள பூக்கள் செறிந்த குளங்களாதல், காவும் - முல்லையிலுள்ள பூம்பொழில்களாதல், காமுடை மனத்தினார் புக்கவர்க்கு - காமநோய் மிக்க மனத்தையுடையராய் அந்நோய் தணிக்கக் கருதிச்சென்றார்க்கு, அரணம் ஆகா - அவை அவர்நோய் தீர்த்துக் காக்கும் மருந்துகள் ஆகமாட்டா, தாம் உடை மனமும் கண்ணும் - மேலும் அந்நோய் கொண்டார்க்கு அவருடைய மனமும் கண்களும், நிறைவும் - நிறையென்னும் பண்புமே, தம்பால ஆகா - அவர் பகுதியினின்று அவர் விருப்பப்படி இயங்கமாட்டா எனின், காமுடை மனத்தினார்க்கு - அக்காமநோய் செறிந்த மனமுடையார்க்கு, யாருளர் களைகண் ஆவார் - பிறர் அவர் இடுக்கண் களைந்து அவரை உய்யக் கொள்வார் யாரேயுளர், (எ - று.) “ஊருள் எழுந்த உருகெழு செந்தீக்கு நீருட் குளித்து முயலாகும் - நீருட் குளிப்பினும் காமம் சுடுமேகுன் றேறி ஒளிப்பினும் காமம் சுடும்“ (நாலடி - 90) என்னும் இச்செய்யுளோடு இதனை ஒப்பிட்டுக் காண்க. “துன்பத்திற் கியாரே துணையாவார் தாமுடைய நெஞ்சந் துணையல் வழி“ என்பது குறள் (1299) |
(இ - ள்.) அரசகன்னி - சுயம்பிரபை, அனையவள் ஆகிய பொழுதின் - அத்தன்மையளாய்க் காமநோயால் வருந்தும்பொழுது, இப்பால் - இங்கே, புனைமலர் அலங்கல் மார்பிற் பூமி அங்கிழவன் தேவி - புனைந்த மலர்மாலையணிந்த மார்பையுடைய பயாபதி வேந்தனின் மனைவியாகிய சசிதேவி என்பாளால், வனம் மலர் உருவக்கண்ணி - தண்ணீரிற்றோன்றும் தாமரை மலர் போன்ற அழகுடைய கண்களையுடையவளும், மணிவண்ணன் - திவிட்ட நம்பியினுடைய, மார்புதோயும் பூணினாளை - மார்பகத்தே பொருந்தும் உரிமையுடையவளும் அணிகலன்களை அணிந்தவளுமாகிய சுயம்பிரபையை, காண்கென விடுக்கப்பட்டார் - சென்று காணுங்கோள் என்று ஏவப்பட்ட மகளிர்கள், (எ - று.) |