பக்கம் : 642 | | (இ - ள்.) மாதவக் குலத்துளார்கள் - பெருமைமிக்க தவப்பள்ளியிலே வதிபவர்களாகிய, மாதவசேனை யுள்ளிட்டு - மாதவ சேனை என்பாளை யுள்ளிட்டு, ஓதிய - கூறப்பட்ட, பெயரின் மிக்கார் - சிறப்புப் பெயர்களையுடையோரும், உலகறி கலையின் வல்லார் - சான்றோர்களால் அறிவதற்குரிய கலைகளிலே வல்லுநரும் ஆகிய ஆரியாங்கனையாரோடும், கோதையும் குழையும் தோடும் குளிர்முத்த வடமும் தாங்கி - மலர்மாலைகளும் தோடுகளும் தண்ணிய நித்திலக்கோவைகளும் (சுயம்பிரபைக்குப் பரிசினிமித்தம்) ஏந்தியவராய், போதிவர்குழலி தாதை - மலர்துதைந்த அளகத்தையுடைய சுயம்பிரபையின் தந்தையாகிய சடிமன்னனின், பொன்னகர் முன்னினார் - அழகிய அரணிமனையை எய்தினார்கள், (எ - று.) தவ வொழுக்கமுடைய மாதவசேனை முதலிய மகளிரோடே, மதுகரி வயந்தசேனை முதலிய மகளிரும், சுயம்பிரபையைக் காண வந்தோர் சடியின் கோயில் எய்தினார், என்க. | ( 169 ) | | 996. | நன்னுத லவரு நம்பி தாயரு 1நடையிற் றூய பொன்னுதற் பிடியுந் தேரும் வையமு மிழிந்து புக்கு மன்னனை வணங்கி 2யன்னோன் பணிகொண்டு மடந்தை கோயில் இன்னிசை மகளிர் முன்சென் றெதிர்கொள வெய்தி னாரே. | (இ - ள்.) நன்னுதல் அவரும் - இங்குக் கூறிய நல்ல நெற்றியையுடைய இரு வேறுவகை மகளிர்களும், நம்பி தாயரும் - திவிட்டனுடைய செவிலித்தாயரும், தூயநடையிற் பொன்நுதல் பிடியும் தேரும் வையமும் - நல்ல நடையுடைமையாற் சிறந்த அழகிய நுதலையுடைய பெண் யானைகள் தேர்கள் பண்டிகள் முதலிய ஊர்திகளினின்றும், இழிந்துபுக்கு - இறங்கி அவ்வரண்மனையினுட் புகுந்து, மன்னனை வணங்கி - சடிமன்னனை வணக்கம் செய்து, அன்னோன் பணிகொண்டு - அவன் கட்டளையை மேற்கொண்டு, மடந்தை கோயில் - சுயம்பிரபையினுடைய கன்னிமாடத்தை, இன் இசை மகளிர் முன் சென்று எதிர்கொள - இனிய இசைபாடுதல்வல்ல மகளிர்கள் வந்து தம்மை எதிர்கொண்டு அழைத்துக்செல்ல, எய்தினார் - அடைந்தார்கள், (எ - று.) அம் மகளிர்கள் ஊர்தியினின்றும் இழிந்து கோயிலுட் புக்கு, அரசன் அருள்பெற்றுப் பின்னர், மடந்தை கோயிலிலே இன்னிசை மகளிர் எதிர்கொளப் புக்கார் என்க. | ( 170 ) |
| (பாடம்) 1. நடக்கவல்ல. 2. மன்னன். | | |
|
|