(இ - ள்.) பொன்னியல் அமளி மேலாள் - பொன்னாலியன்றதொரு படுக்கையின்மேல் அமர்ந்தவளாய், பூவணை மருங்குதீண்ட - பூக்களால் ஆய அணைகள் தன் பக்கத்தே பொருந்தச் சிறிது சாய்ந்து, கன்னியர் கவரிக்கற்றைக் கைவலன் அசைப்ப - பணிமகளிர்கள் கவரிமாவின் மயிர்க்கற்றையாகிய சாமரைகளை வலப்பக்கத்தே நின்று இயக்கவும், காய் பொன் இன்இசைக் குழைவில் வீச - ஒளிர்தலையுடைய பொன்னாற் செய்யப்பட்ட காட்சிக்கினிய பொருத்துக்களையுடைய தோடுகள் ஒளியை வீசவும், இனிதின் அங்கிருந்த நங்கை - இனிதாக அவண் வீற்றிருந்த சுயம்பிரபை, துன்னிய மகளிர்தம்மை - ஆண்டு வந்துற்ற மகளிர்களை, தமர்தொழுது உணர்த்த - தன் தோழியர்கள் தன்னைத் தொழுது அவர் வரவைத் தனக்கு அறிவித்தமையால், கண்டாள்-காண்பாளாயினாள், (எ - று.) இசை - இசைப்பு - பொருத்தல். சுயம்பிரபையின் நெஞ்சகம் திவிட்டன் பாலதாகலின் ‘உணர்த்தக் கண்டாள்’ என்றார். |
(இ - ள்.) மற்றவர் - அம்மகளிர்கள், வலங்கொண்டு தொழுது வாழ்த்தி அடைந்தபோதின் - தன்னை வலமாக வந்து வணங்கி வாழ்த்துக்கூறி அவண் அடைந்தபொழுது, உலங்கொண்ட வயிரத்தோளான் உழைக்கல மகளிர் என்று - இவர்கள் திரள்கற்போன்ற உறுதியாய தோளையுடைய திவிட்ட நம்பியின் உழைக்கல மகளிர்கள் ஆவர் என்று கருதுவதனாலே, நலம்கொண்டு ஓர் ஆர்வம்கூர - அந்நலத்தைப் பற்றுக்கோடாகக்கொண்டு ஒரு விருப்பம் தோன்றிற்றாக, நகைமுகம் முறுவல் |