பக்கம் : 644
 

தோன்றிப் புலம் கொண்டது - விளக்கமுடைய தன்முகத்தே புதுவதொரு நகைதோன்றிப்
புறத்தார்க்குப் புலனாந்தன்மை எய்திற்று, அதனைக்காப்பான் - அந்நகையை அயலார்
அறியா வண்ணம் காக்கும் பொருட்டு, பூவொன்று நெரித்துமோந்தாள் -
ஆண்டயலிற்கிடந்ததொரு மலரை விரல்களால் நெகிழ்த்து மோப்பாளாய் அந்நகையை
மறைத்தாள், (எ - று.)

அம்மகளிர் அடைந்து வலங்கொண்டு வணங்கியபொழுது, இவர்கள் எம்பெருமானின் ஏவன்
மகளிர் என்று எழுந்த எண்ணத்தாலே, தன்முகத்தே புதிய ஒளியாகிய மெய்ப்பாடு
தோன்றப், புறத்தே கிடந்த பூவினை மோப்பாளாய் அதனைப் பிறர் காணாதபடி மறைத்தாள்
என்க.
 

(172)

 

999.

விண்விளக் குறுக்குந் திங்கட் சுடர்நுதல் விளக்கி னாலும்
பெண்விளக் குறுக்கு மேனி பெருகிய வொளியி னாலும்
பண்விளக் குறுக்கு மின்சொற் பாவையப் பாவை மாரைக்
கண்விளக் குறுக்கு 1மாற்றாற் காண்டலுக் கரிய ளானாள்.
 

     (இ - ள்..) விண் விளக்குறுக்கும் திங்கள் சுடர்நுதல் - விசும்பை
விளக்கம் செய்யும் திங்களைஒத்த ஒளிபொருந்திய நெற்றியினது, விளக்கினாலும் -
ஒளியினாலும், பெண் விளக்குறுக்கும் மேனி பெருகிய ஒளியினாலும் - பெண்மையைப்
பெரிதும் சிறக்கச்செய்யும் தன் திருமேனியினின்றும் மிக்குத்தோன்றும் ஒளியினாலும்
தன்பேரழகை, பண் விளக்குறுக்கும் இன்சொற் பாவை - பண்போன்ற இன்பத்தை
விளைக்கும் இனிய சொல்லையுடைய சுயம்பிரபை, அப்பாவைமாரை - அம்மகளிருடைய,
கண் விளக்குறுக்கும் ஆற்றால் - கண்ணைக் கூசச்செய்யுமாற்றால், காண்ட லுக்கு அரியள்
ஆனாள் - அவர் காண்பதற்கு அரியளாயிருந்தாள், (எ - று.)

கண் விளக்குறுத்தல் - கண் கூசச்செய்தல். நுதலின் ஒளியாலும், மேனி ஒளியாலும், பாவை
அவர் காண்டற்கு அரியளானாள் என்க.
 

( 173 )

அமிர்தபிரபை அருக்ககீர்த்தி விசயதிவிட்டர்
ஆகிய மூவரையும் காட்டல்

1000.

செஞ்சிலம் பொலிக்குஞ் செல்வச் சீறடித் தெய்வப் பாவை
பஞ்சிலங் கணையின் மேலாள் பரந்தொளி திருவில் வீச
மஞ்சிலங் குருவ 2வானின் மழையிடை நுடங்கு மின்போ
லஞ்சிலம் படியி னார்த மறிவினை யயர்வித் திட்டாள்.
 

     (இ - ள்.) செஞ்சிலம்பு ஒலிக்கும் செல்வச்சீறடி - செவ்விய சிலம்பு ஆரவாரிக்கும்
செல்வமிக்க சிறிய அடிகளையுடைய, தெய்வப்பாவை - தெய்வமகள் ஆகிய சுயம்பிரபை,
பஞ்சு இலங்கு அணையின் மேலாள் -

 

     (பாடம்) 1. மாதோ. 2. வாளின்.